Jun 25, 2026
Thisaigal NewsYouTube
ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!
சிறப்பு செய்திகள்

ஷா ஆலாமில் தாய்மொழி நாள்: முன்னெடுப்பு விழா!

Share:

ஷா ஆலாம், மார்ச்.06-

மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா- ஷா ஆலம், செக்‌ஷன் -17 இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில்- இயக்கத் தேசியத் தலைவரும் -மூத்த ஊடகவியலாளருமான-'எழுத்தண்மை ஏந்தல்'முனைவர் பெரு.அ.தமிழ்மணி, தாய்மொழி வரலாற்றுப் பின்னணிக் குறித்துப் பேருரை ஆற்றுவார்.

இயக்கத் துணைத் தலைவர்-'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் தலைமையேற்கும் இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர்- மானமிகு- சா.பாரதியின் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் இவ்விழாவில் கருஞ்சட்டை இயக்க பெண்ணியவாதி- தோழர், நீலமலர்- மாணவர்களிடையே- தாய்மொழி அவசியம் . குறித்து பேசுவார். தமிழ் இனவுணர்வாளர்- மானமிகு- பசீர்- சிறப்புரையாற்றுவார்.

உலகத்தாய்மொழி திருநாளை முன்னெடுத்து நடத்தப்படும் இவ்விழாவில் பெற்றோர்கள் கலந்து கொள்வதோடு, மாணவச் செல்வங்களையும் பங்கெடுக்க வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று இயக்கத் தலைமைச் செயலாளர் மானமிகு சி.மு.விந்தைக்குமரன் கேட்டுக் கொள்கிறார். விழா குறித்து மேல் விபரங்களுக்கு +6017-466 1767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!