ஷா ஆலாம், மார்ச்.06-
மலேசியத் தமிழர் தன்மானச் சிந்தனைப் பேரவையின் ஏற்பாட்டில் தாய்மொழி நாள்! முன்னெடுப்பு விழா- ஷா ஆலம், செக்ஷன் -17 இல் உள்ள மெர்பாவ் மண்டபத்தில் வரும் மார்ச் 8 ஆம் தேதி ஞாயிறுக் கிழமை பிற்பகல் 3.00 மணியளவில் நடைபெறவிருக்கிறது.

இவ்விழாவில்- இயக்கத் தேசியத் தலைவரும் -மூத்த ஊடகவியலாளருமான-'எழுத்தண்மை ஏந்தல்'முனைவர் பெரு.அ.தமிழ்மணி, தாய்மொழி வரலாற்றுப் பின்னணிக் குறித்துப் பேருரை ஆற்றுவார்.

இயக்கத் துணைத் தலைவர்-'தன்மானப் பெருஞ்சுடர்' த.பரமசிவம் தலைமையேற்கும் இவ்விழாவில், மதிக- தேசியத் தலைவர்- மானமிகு- சா.பாரதியின் சிறப்புரை ஆற்றுவார்.

மேலும் இவ்விழாவில் கருஞ்சட்டை இயக்க பெண்ணியவாதி- தோழர், நீலமலர்- மாணவர்களிடையே- தாய்மொழி அவசியம் . குறித்து பேசுவார். தமிழ் இனவுணர்வாளர்- மானமிகு- பசீர்- சிறப்புரையாற்றுவார்.

உலகத்தாய்மொழி திருநாளை முன்னெடுத்து நடத்தப்படும் இவ்விழாவில் பெற்றோர்கள் கலந்து கொள்வதோடு, மாணவச் செல்வங்களையும் பங்கெடுக்க வைக்குமாறு கேட்டுக் கொள்ள வேண்டுமென்று இயக்கத் தலைமைச் செயலாளர் மானமிகு சி.மு.விந்தைக்குமரன் கேட்டுக் கொள்கிறார். விழா குறித்து மேல் விபரங்களுக்கு +6017-466 1767 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








