Jun 25, 2026
Thisaigal NewsYouTube
அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம்
சிறப்பு செய்திகள்

அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம்

Share:

பத்துமலை, அக்டோபர் 22-

ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம் எனும் தீபாவளி அன்பளிப்பு வழங்கும் நிகழ்வு, கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மணி 2 முதல் மாலை 7 மணி வரை Batu Caves, Dewan Masyarakat Taman Batu Caves மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது.

ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் தலைவர் மருதையா சுப்பிரமணியம் மற்றும் இதர பொறுப்பாளர்களின் மிகுந்த ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் வசதிகுறைந்த 100 பேர் முதல் 120 பேர் வரையில் தீபாவளி அன்பளிப்பு கூடைகள் வழங்கப்பட்டன.

கடந்த சில ஆண்டு காலமாக வசதி குறைந்த மக்களுக்கு உதவுவதிலும், மாணவர்களுக்கு சமய நன்னெறி பண்புகளை ஊக்குவிக்கும் பட்டறைகளை நடத்துவதிலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டுள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பு தீபாவளி திருநாளில் வசதி குறைந்தவர்களையும் எண்ணிப்பார்க்க வேண்டும் என்ற ஓர் உன்னத நோக்கில் உதவிப் பொருட்கள் வழங்குதல், அதிர்ஷ்ட குலுக்கல் உட்பட பல்வேறு சிறப்பு நிகழ்வுகளுடன் இவ்விழா ஏற்பாடு செய்யப்பட்டதாக அதன் பொதுச் செயலாளர் Tan Kumar விவரித்தார்.

நிகழ்விற்கு தலைமையேற்ற பிரதமரின் அரசியல் செயலாளர் Datuk Azman Abidin- னின் சிறப்பு அதிகாரி Jonathan Vela, “அன்பு கரங்களோடு தீபத் திருநாள் கொண்டாட்டம்” எனும் இந்நிகழ்வை சிறப்பான முறையில் ஏற்பாடு செய்த ஸ்ரீ தர்ம சாஸ்தா அன்பு கரங்கள் சிலாங்கூர் அமைப்பின் பொறுப்பாளளர்களுக்கு தமது பாராட்டுக்களையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெறுவதற்கு அத்தியாவசியப்பொருட்கள் மற்றும் நன்கொடைகளை வழங்கி உதவிக்கரம் நீட்டிய அனைவருக்கும் அமைப்பின் நிர்வாகக்குழு சார்பில் Tan Kumar தமது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!