Apr 27, 2026
Thisaigal NewsYouTube
கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் திட்டம் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெறுகிறது
சிறப்பு செய்திகள்

கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் திட்டம் ஊக்கமளிக்கும் வரவேற்பைப் பெறுகிறது

Share:

செனாவாங், மார்ச்.14-

MiSI (மலேசிய இந்திய திறன்கள் முன்முயற்சி) மூலம் செனாவாங்கின் ஃபாரஸ்ட் ஹைட்ஸில் மார்ச் 5 முதல் மார்ச் 9 வரை நடைபெற்ற கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் திட்டம், தென் பகுதி பங்கேற்பாளர்களிடமிருந்து மிகவும் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்தத் திட்டம் கிடங்கு நிர்வாகம், சில்லறை விற்பனைச் செயல்பாடுகள் மற்றும் விநியோகச் சங்கிலி நிர்வாகமா ஆகியவற்றில் பங்கேற்பாளர்களுக்கு பயிற்சி வழங்குவதை நோக்கமாகக் கொண்டது. இது தொழில்துறையில் அவர்களின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது.



ஐந்து நாள் பயிற்சி நெடுகிலும், பங்கேற்பாளர்கள் பொருள் மற்றும் கிடங்கு நிர்வாகம், SOP எனப்படும் தர செயல்பாட்டு நடைமுறைகளுடன் இணங்குதல், தொழில்துறை-தரநிலை செயல்பாடுகள், பொருட்கள் பொட்டலமிடுதல், விற்பனை நுட்பங்கள் மற்றும் ஆர்டர் நிர்வாகம் உள்ளிட்டவைகள் வாயிலாக அரிய திறன்களைப் பெற்றனர். கிடங்குகள் முதல் பயனீட்டாளர்கள் வரையிலான முழு விநியோகச் சங்கிலி சுற்றுச்சூழல் அமைப்பையும் புரிந்துகொள்ள உதவும் வகையில், தயாரிப்புகளைத் திறமையாக ஒழுங்கமைத்து கையாள்வதற்கான சிறந்த நடைமுறைகளையும் அவர்கள் கற்றுக் கொண்டனர். பங்கேற்பாளர்கள் அத்திட்டத்தில் மிகுந்த திருப்தியை வெளிப்படுத்தினர். லோஜிஸ்திக் செயல்பாடுகள் மற்றும் சில்லறை விற்பனை நிர்வாகம் பற்றிய தெளிவான புரிதலை அப்பயிற்சி வழங்கியதாக அவர்கள் கூறினர். அப்புதியத் திறன்களை நேரடியாக தங்கள் வேலைகளில் பயன்படுத்த அனுமதிக்கும் நடைமுறை கற்றல் அனுபவத்தால் அவர்கள் உற்சாகமாகமடைந்தனர்.

நிகழ்ச்சியின் இறுதி நாளில், ராசா தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் YB சா கீ சின் மற்றும் சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் YB குணா ஆகியோர் நிறைவு விழாவில் கலந்து கொண்டு பங்கேற்பாளர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினர். கிடங்கு, சில்லறை விற்பனை மற்றும் விநியோகச் சங்கிலித் துறைகளில் திறன் மேம்பாட்டிற்கான முக்கியத்துவத்தை வலியுறுத்தி அவர்கள் ஊக்கமளிக்கும் உரைகளை நிகழ்த்தினர். தங்கள் அறிவைப் பயன்படுத்தி தங்கள் தொழில்களில் முன்னேறவும், மலேசியாவின் சில்லறை விற்பனை மற்றும் லோஜிஸ்திக் துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்க அவர்கள் பங்கேற்பாளர்களை ஊக்கப்படுத்தினர். பங்கேற்பாளர்கள் தங்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழுடன், தங்கள் தொழில் வாழ்க்கையை விரிவுபடுத்துவதிலும், வேலை சந்தையில் தங்கள் வேலை வாய்ப்பை மேம்படுத்துவதிலும் கூடுதல் அனுபவம் பெற்றுள்ளனர்.

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு