Jun 25, 2026
Thisaigal NewsYouTube
கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி, பொதுவில் மகத்தான் வரவேற்பு
சிறப்பு செய்திகள்

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி, பொதுவில் மகத்தான் வரவேற்பு

Share:

நாட்டில் மிகப்பெரிய மொத்த வியாபார சந்தையாக திகழும் கிள்ளான் ஜிஎம் பேரங்காடியின் வர்த்தக சமூக செயலி, பொதுவில் அபரிமித ஆதரவை பெற்று வருகிறது.

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி என்பது அந்த பேரங்காடியின் புத்தாக்க முயற்சிகளில் ஒன்றாகும். கிள்ளான் ஜிஎம் பேரங்காடி மொத்த வியாபார சந்தையுடன் தொழில் முனைவர்கள் மிக எளிதில் தொடர்பு கொண்டு வர்த்தக வாய்ப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி வாயிலாக நாடு முழுவதும் 8,000 க்கும் மேற்பட்ட பதிவேற்றம் நடைபெற்றுள்ளது.

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி தொடங்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த செயலியின் பிரதான பயனீட்டு அம்சங்கள் அதாவது பிஸ்னஸ் மேட்சிங் என்று அழைக்கப்படும் வர்த்தக பொருத்தம், ஆக்கமூட்டும் வகையில் மகத்தான ஆதரவை பெற்று வருகிறது.


கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலி வாயிலாக அதன் மொத்த வியாபார சந்தைக்கும், தொழில் முனைவர்களுக்கும் இடையில் ஓர் உறவுப்பாலாக விளங்கி, இரு வழி வர்த்தகத்தை ஊக்குவிப்பதே கிள்ளான் ஜிஎம் பேரங்காடியின் பிரதான நோக்கமாகும்.

கிள்ளான் ஜிஎம் பேரங்காடி மையத்தின் பொருட்களுக்கான தொடர்புத்துறை முதிர் நிலை நிர்வாகி நொர்சுஹஐடா ஒத்மான் கூறுகையில், இவ்வாண்டு ஜுன் மாதம் வரை பிஸ்னஸ் மேட்சிங் என்ற வர்த்தக பொருத்தம் வாயிலாக மொத்த வியாபார தளத்துடன் தொடர்பை ஏற்படுத்தும் 150 க்கும் மேற்பட்ட தொழில்முனைவர்கள் சந்திப்புகள் வெற்றிகரமான நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டார்.

கிள்ளான் ஜிஎம் வர்ததக சமூக செயலியின் பயன்பாட்டை சமுதாயம் ஏற்றக்கொண்டுள்ளது என்பதையே மேற்கண்ட எண்ணிக்கை அதிகரிப்பு காட்டுகிறது. மொத்த வியாபாரியும் பயனீட்டாளரும் தங்களுக்கான தொழில்முனைவர் வாய்ப்புகளில் மிக எளிதாகவும் துரிதமாகவும் ஊடுருவ முடிகிறது என்பதுடன் இந்த செயலி வாயிலாக தங்களின் விற்பனை பொருட்களை பிரபலப்படுத்த விரும்புகின்றவர்களுக்கு பிரத்தியேகமாக ஏற்படுத்தப்பட்ட ஸ்டூடியோவை இலவசமாக பயன்படுத்திக்கொள்ளவும் வாய்ப்பு வழங்குகிறது என்று நொர்சுஹஐடா ஒத்மான் குறிப்பிட்டார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!