Jan 21, 2026
Thisaigal NewsYouTube
பொருளக கணக்குகள் முடக்கத்திற்கு எதிராக துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
சிறப்பு செய்திகள்

பொருளக கணக்குகள் முடக்கத்திற்கு எதிராக துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்பத்தினரும் நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

Share:

கோலாலம்பூர், ஜூன் 11-

முடக்கம் செய்யப்பட்டுள்ள தங்களது பொருளக கணக்குகளை, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம்-மும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் திரும்ப ஒப்படைக்க வலியுறுத்தி, நிதி முன்னாள் அமைச்சர் துன் டைம் ஜைனுதீன்-னும் அவரது குடும்ப உறுப்பினர்களும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் சீராய்வு மனுவை தாக்கல் செய்துள்ளனர்.

இம்மாதம் 6ஆம் தேதி டைம் ஜைனுதீன், அவரது மனைவி, நான்கு பிள்ளைகள், 18 நிறுவனங்கள் என மொத்தம் 24 பேர், அந்த மனுவை பதிவு செய்துள்ளனர்.

அன்வார், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தை தவிர, அவ்வாணையத்தின் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கி, மலேசிய அரசாங்கம் ஆகியற்றையும், அந்த மனுவில் பிரதிவாதிகளாக அவர்கள் அனைவரும் குறிப்பிட்டுள்ளனர்.

பொருளக கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளதால், தங்களது வர்த்தக நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்கு இலக்காகியுள்ளதாகவும் அந்நடவடிக்கை சட்டப்படி செல்லாது எனவும் தங்களது மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.

சொத்து விபரங்களை அறிவிக்கும்படி, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் வழங்கிய உத்தரவை கடைப்பிடிக்க தவறியதற்காக, டைம் ஜைனுதீன்-னும் அவரது மனைவியும் கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கை எதிர்நோக்கி வருகின்றனர்.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்