Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கூடுதல் லாப ஈவு - டத்தோ சகாதேவன் அறிவிப்பு
சிறப்பு செய்திகள்

தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களுக்கு கூடுதல் லாப ஈவு - டத்தோ சகாதேவன் அறிவிப்பு

Share:

ஈப்போ, ஏப்ரல்.21-

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் அதன் உறுப்பினர்களுக்குக் கடந்த ஆண்டை விட கூடுதல் லாப ஈவுத் தொகையை அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக அதன் தலைமை நிர்வாகி டத்தோ பா. சகாதேவன் அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 7 விழுக்காடு லாப ஈவு வழங்கப்பட்டது . இந்த ஆண்டு அது அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு , வரும் ஜூன் மாதம் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் பொதுக் கூட்டத்தில் அறிவிக்கப்படும் என்று டத்தோ சகாதேவன் குறிப்பிட்டார்.

நேற்று மாலையில் ஈப்போ கலாச்சார மண்டபத்தில் நடைபெற்ற தேசிய நில நிதி கூட்டுறவுச் சங்கத்தின் பேரா மாநில பேராளர் மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் டத்தோ சகாதேவன் இதனைத் தெரிவித்தார்.

தேசிய நில நிதிக் கூட்டுறவுச் சங்கம் லாபகரமாகச் செயல்பட்டு வருகிறது. அது உறுப்பினர்களின் நன்மைக்கு, அவர்களின் நலன் சார்ந்த திட்டங்களைச் சங்கம் தொடரும் என்று டத்தோ சகாதேவன் குறிப்பிட்டார்.

சுமூகமாக நடைபெற்ற இந்த பேராளர் மாநாட்டில் 845 பேராளர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக, 18 இடங்களுக்கான பேராளர் தேர்வுக்கு நடைபெற்ற தேர்தலில், 21 பேர் போட்டியிட்டனர் . இதில் தேர்வு செய்யப்பட்ட 18 பேராளர்களின் பெயர்களை டத்தோ சகாதேவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!