Jun 25, 2026
Thisaigal NewsYouTube
மனநலப் பாதைக்கு வழிகாட்டுகிறது சுவாரா மிண்டா
சிறப்பு செய்திகள்

மனநலப் பாதைக்கு வழிகாட்டுகிறது சுவாரா மிண்டா

Share:

பெட்டாலிங் ஜெயா, அக்டோபர்.23-

மனநலத்திற்கும் நல்வாழ்விற்கும் உறுதுணையாக அதே வேளையில் அது தொடர்பான பிரச்னை, சவால்களை எதிர்கொள்பவர்களுக்கு வழிகாட்டுகிறது அரசு சாரா இயக்கமான சுவாரா மிண்டா.

ஒவ்வொருவரின் மனோநிலையிலும் மன நலத்திலும் களங்கம் இல்லாத சூழல் ஏற்பட சமூகத்தின் ஆதரவு மிக முக்கியம் என்கிறார் சுவாரா மிண்டா அமைப்பின் தோற்றுநர், தலைவர் விசாலாட்சி அருணகிரி.

மனநல குறைபாடுகள் உள்ள நபர்களுக்கான உரிமைகளைப் பாதுகாப்பதிலும், அவர்களில் ஒருவருக்கொருவர் உதவிக் கொள்வதிலும் சுவாரா மிண்டா போராடி வருகிறது. சுருங்கச் சொன்னால், மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், மன நல பாதிக்கப்பட்டவர்களுக்கு மனநல விழிப்புணர்வுக்கான பாதையை ஒளிரச் செய்கிறது சுவாரா மிண்டா.

மக்களின் மனநலம் பேணும் மையமாக, அடைக்கலம் புகும் நிவாரணியாக விளங்குகிறது எங்கள் சுவாரா மிண்டா என்கிறார் விசாலாட்சி.

உலக மனநலத் தினத்தை முன்னிட்டு வழங்கிய பேட்டியில் விசாலாட்சி இவ்வாறு விவரித்தார்.

மனோவியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்கள், எங்கள் மனநல மையத்திற்கு வருவதுதான் பாதுகாப்பான இடம் என்கிறார் விசாலாட்சி.

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், குடும்ப வாழ்வில் தனிமையை நாடுகின்றவர்கள், தனித்து வாழும் தாய்மார்கள் ஆகியோருக்கு இந்த மையம் உறுதுணையாக இருக்கிறது என்கிறார் மலேசிய சுகாதார அமைப்பின் உதவித் தலைவரும், சுவாரா மிண்டாவின் செயற்குழு உறுப்பினருமான திருமதி மாலாதேவி.

அவர்களின் சின்ன சின்ன சந்தோஷமே எங்களுக்கு முக்கியம். அவர்கள் உடல் நலத்துடன் மட்டும் அல்ல, மனோரீதியாகவும் நலமாக இருக்க வேண்டும். அவர்களுக்கு உதவுவதே சுவாரா மிண்டா அமைப்பின் பிரதான நோக்கமாகும் என்றார் மாலாதேவி.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!