Nov 3, 2025
Thisaigal NewsYouTube
ஊழல் உணர்வுக் குறியீட்டு (CPI) சிறப்புக் குழு: விரைவுச் சீர்திருத்தங்களால்  நேர்மறை விளைவுகள்
சிறப்பு செய்திகள்

ஊழல் உணர்வுக் குறியீட்டு (CPI) சிறப்புக் குழு: விரைவுச் சீர்திருத்தங்களால் நேர்மறை விளைவுகள்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.03-

நல்லாட்சியில் மலேசியாவின் அனைத்துலக நிலையை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க உந்துதலில், ஊழல் குறித்த பொதுமக்களின் உணர்வைச் சமாளிக்கத் தொடங்கப்பட்ட சிறப்பு அரசாங்கப் பணிக்குழு, ஏற்கனவே தெளிவான சாதனைகளைக் காட்டுகிறது. அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர், தான்ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி பின் அபு பக்கர் அவர்களின் தலைமையில் இயங்கும் ஊழல் உணர்வுக் குறியீட்டுக்கான (CPI) சிறப்புப் பணிக்குழு, பொதுச் சேவைத் துறையின் செயல்திறனை அதிகரிக்கவும், சட்டச் சீர்திருத்தங்களையும் நிர்வாக நடைமுறைகளையும் ஒழுங்குபடுத்தவும் அதன் திறன்களையும், தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. இதன் மூலம், 13வது மலேசியத் திட்டத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, 2030க்குள் சிபிஐயில் முதல் 25 நாடுகளுக்குள் மலேசியாவை நிலைநிறுத்துவது என்ற அதன் முதன்மை இலக்கிற்கான அடித்தளத்தை இடுகிறது.

ஊழலை எதிர்த்துப் போராடுவதில் ஓர் ஒன்றுபட்ட முயற்சி

2024 பிற்பகுதியில் நிறுவப்பட்ட இந்தச் சிறப்புக் குழுவானது, நல்லாட்சியின் மூலம் ஊழலை எதிர்த்துப் போராடுவதற்கான அரசாங்கத்தின் "முழுமையான அணுகுமுறையை" பிரதிபலிக்கிறது. இது தலைமைச் செயலகங்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) போன்ற நிறுவனங்களின் தலைவர்கள் உட்பட உயர்மட்ட அதிகாரிகளையும், அத்துடன் புர்சா மலேசியா, ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல்-மலேசியா போன்ற தனியார் துறை, கல்வியாளர்கள், சமூகப் பிரதிநிதிகளையும் ஒன்றிணைக்கிறது. இந்த பல்வகைப்பட்ட அமைப்பு, நாட்டின் ஊழல் குறித்த உணர்வை மேம்படுத்துவது "MACC-ன் பொறுப்பு மட்டுமல்ல, அனைவரின் பொறுப்பு" என்ற புரிதலை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

இந்த வியூகம் இரண்டு பகுதிகளாக உள்ளது:

1. உத்வேகத்தை உருவாக்க "விரைவுச் சீர்திருத்தங்களை" நடைமுறைப்படுத்த பரிந்துரைத்தல், அதே சமயம் பகிரப்பட்ட பொறுப்பு, வலுவான நிறுவனங்கள், முதன்மை ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைக்கப்பட்ட 10 ஆண்டு செயல் திட்டத்தில் ஒரே நேரத்தில் செயல்படுத்துதல்.

2. நல்லாட்சியுன் ஊழல் எதிர்ப்பு முயற்சிகளும் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதை உறுதிச் செய்ய, அமலாக்கம், பொது நிதி மேலாண்மை, வணிக போட்டித்தன்மை, முதலீடு, சட்டச் சீர்திருத்தங்கள், முதன்மைத் தொடர்பு என குறிப்பிட்ட பகுதிகளை இலக்காகக் கொண்டு சிறப்புக் குழு ஆறு கவனம் செலுத்தும் குழுக்களை அமைத்துள்ளது.

ஆரம்பச் சீர்திருத்தங்களின் பலன்கள்

இந்த ஒருங்கிணைந்த முயற்சிகளின் முடிவுகள் இப்போது தெரிய வரத் தொடங்கியுள்ளன. தேசிய ஊழல் எதிர்ப்பு வியூகம் (NACS) 2024-2028-ன் கீழ் உள்ள 60 துணை-வியூகங்களில் 19 துணை-வியூகங்கள் ஏற்கனவே அமைச்சுகளிலும் நிறுவனங்களிலும் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டுள்ளதாக MACC அறிவிக்கிறது. இவை வெறும் வாக்குறுதிகள் அல்ல; அவை செயல்களாக மாற்றப்பட்ட உறுதிப்பாடுகள்.

முக்கியமானத் தொடக்க நிலைச் சாதனைகள் பின்வருமாறு:

பொது நிதி மேலாண்மைக் கணக்காய்வை அதிகரித்தல்:

* இந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட அரசு கொள்முதல் மசோதா (Government Procurement Bill), பொது கொள்முதல், பொது நிதியின் பயனுள்ள பயன்பாட்டில் பொறுப்புணர்வையும் வெளிப்படைத்தன்மையையும் மேம்படுத்துவதற்கான மலேசியாவின் முயற்சிகளில் ஒரு பெரிய மைல்கல்லைக் குறிக்கிறது.

வெளிப்படையான நடைமுறைகளும் கடுமையான தண்டனை நடவடிக்கைகளையும் அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தச் சட்டம் ஊழல் நடைமுறைகளுக்கான வாய்ப்புகளை கணிசமாகக் குறைக்கும், பொது நிதியைப் பாதுகாக்கும், அரசாங்கச் செலவினங்கள் மீதான பொது நம்பிக்கையை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

* 2024 இல் நிறைவேற்றப்பட்ட தணிக்கைச் சட்டம் 1957 (Audit Act 1957)-ன் திருத்தங்கள், தலைமைத் தணிக்கையாளரின் அதிகார வரம்பையும் திறனையும் கணிசமாக விரிவாக்கியுள்ளன. குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களில், பொது நிதியைப் பெறும் நிறுவனங்கள் அல்லது அரசாங்க உத்தரவாதங்களைப் பெறும் நிறுவனங்கள் உட்பட அரசு தொடர்புடைய நிறுவனங்கள் (GLCs) மீதான தணிக்கை அதிகாரங்களை விரிவாக்குதல், பொது நிதியைக் கண்காணிக்கும் தணிக்கை அணுகுமுறையை (Follow the Public Money Audit approach) நிறுவுதல் ஆகியவை அடங்கும்.

* இந்தச் சீர்திருத்தங்கள் பொது நிதியின் ஒவ்வொரு வெள்ளியும் கண்காணிக்கப்படக்கூடியதாகவும், பொறுப்புடையதாகவும், விதிகள், ஒழுங்குமுறைகள், இலக்குகளுக்கு இணங்க செலவிடப்படுவதை உறுதிச் செய்வதற்கான தேசிய உறுதிப்பாட்டைக் காட்டுகின்றன. இருப்பினும், தணிக்கையானது அறிக்கைகளை உருவாக்குவதோடு மட்டும் முடிவடையக்கூடாது. அமலாக்கம், தீர்வு நடவடிக்கை, திருத்த நடவடிக்கைகளைப் பகிரங்கமாக வெளியிடுதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகள்.

* தணிக்கை அதிகார வரம்பின் அண்மைய விரிவாக்கமும் வெளிப்படையான அறிக்கையிடலில் அதிக முக்கியத்துவமும் அளிப்பதன் மூலம், பொதுத் தணிக்கையாளர்களால் அரசு தொடர்புடைய நிறுவனங்களின் செயல்பாடுகள் மீது அதிகப்படியான ஆய்வை நாம் காண்கிறோம். அரசு தொடர்புடைய நிறுவனங்கள் பொது மேற்பார்வைக்கு விதிவிலக்காக இல்லாமல், நல்லாட்சி சுற்றுச்சூழலின் ஒருங்கிணைந்த பங்கேற்பாளர்களாக, குறிப்பாக பொது நிதி, பொது நலன்கள் சம்பந்தப்பட்ட இடங்களில் கருதப்பட வேண்டும்.

வணிகப் போட்டித்திறனையும் முதலீட்டாளர் நம்பிக்கையையும் மேம்படுத்துதல்:

* மலேசிய உற்பத்தித்திறன் கழகம் (MPC) ஊராட்சி மன்றங்களுடன் நெருக்கமாகச் செயல்பட்டு, குறிப்பாக AI போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஊராட்சி மன்ற பொதுச் சேவை விநியோகத்தை மேம்படுத்துகிறது. கூலாய் நகராட்சி மன்றம் போன்ற பல மன்றங்களில் அதிகாரத்துவத்தை குறைப்பதற்கான முயற்சிகள் ஏற்கனவே காணப்படுகின்றன, எடுத்துக்காட்டாக, கூலாய் ஃபாஸ்ட் லேன் (Kulai Fast Lane) முன்முயற்சி மூலம், கட்டுமான அனுமதி, இயக்க உரிமங்களுக்கான ஒப்புதல் செயல்முறைகளை திறம்பட விரைவுபடுத்தியுள்ளது. இஃது ஒரு காலத்தில் மாதங்கள் எடுத்தது இப்போது சில நாட்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.

* மலேசிய முதலீட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (MIDA) கீழ் உள்ள இன்வெஸ்ட் மலேசியா ஃபாசிலிடேஷன் செண்டர் (IMFC), முதலீட்டு நடைமுறைகளை எளிதாக்குதல், அதிகாரத்துவத்தைக் குறைத்தல், திட்டச் செயல்பாட்டை விரைவுபடுத்துதல் மூலம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் முதலீட்டிற்கு உதவுவதற்காக ஒரு ஒரே இடத்தில் தீர்வு காணும் மையமாக நிறுவப்பட்டுள்ளது.

* கூடுதலாக, அதிகப்படியான அதிகாரத்துவத்தைக் கையாள்வதற்கும், காலாவதியான நடைமுறைகளை ஒழிப்பதற்கும், சிக்கலான அல்லது காலாவதியான நிலையான இயக்க நடைமுறைகளை (SOPs) மதிப்பாய்வு செய்து எளிமைப்படுத்துவதன் மூலம், பொதுச் சேவை செயல்முறைகளை வேகமாகவும், மேலும் பயனர் நட்புடனும் ஆக்குவதற்கும் பொது நிர்வாகச் செயல்திறன் உறுதிச் சட்டம் (ILTIZAM) என்ற புதிய சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நிறுவன, சட்டச் சீர்திருத்தங்கள்:

* ஆளுமையில் ஒருமைப்பாட்டையும் பொது நம்பிக்கையையும் வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்ட சட்டச் சீர்திருத்த முயற்சிகளை விரைவுபடுத்துவதற்கான பரிந்துரைகளுக்கு CPI சிறப்புக் குழு அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது.

* இந்த முன்முயற்சிகளில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தகவலளிப்போர் பாதுகாப்புச் சட்டம் 2010 (Whistleblower Protection Act 2010)-ன் திருத்தம் அடங்கும். திருத்தப்பட்ட சட்டம், வலுவான சட்டப் பாதுகாப்புகளும் பரந்த பாதுகாப்பு வழிமுறைகளையும் வழங்குவதன் மூலம் தகவல் அளிப்போரிடையே நம்பிக்கையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது, பழிவாங்குவதற்குப் பயப்படாமல் அதிக நபர்கள் முன்வந்து அமலாக்க நிறுவனங்களுக்கு முறைகேடு அல்லது ஊழலைப் புகாரளிக்க ஊக்குவிக்கும்.

* கூடுதலாக, தகவல் அறியும் உரிமை சட்டப் பரிந்துரை (Freedom of Information Bill), ஒம்ப்யூட்ஸ்மேன் மசோதா (Ombudsman Bill) ஆகியவை உள்ளன, இவை இரண்டும் எதிர்காலத்தில் பொதுச் சேவைகள் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புணர்வையும் மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மத, சமூக அல்லது தொண்டு நோக்கங்களுக்காக நிறுவப்பட்ட அறங்காவலர் அமைப்புகளால் நிதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க அறங்காவலர்கள் (நிறுவனம்) சட்டம் 1952 [சட்டம் 258], அறங்காவலர் சட்டம் 1949 [சட்டம் 209]-ன் திருத்தங்கள் இயற்றப்பட்டுள்ளன. இந்தச் சீர்திருத்தங்கள், மலேசியாவின் பரந்த ஊழல் எதிர்ப்பிலும் நல்லாட்சி நிகழ்ச்சி நிரலிலும் முக்கியத் தூண்களாக ஒருமைப்பாடு, வெளிப்படைத்தன்மையையும் சட்டத்தின் ஆட்சியையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு நல்லாட்சி சுற்றுச்சூழலை உருவாக்குவதில் அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கின்றன.

அமலாக்க செயல்திறனை வலுப்படுத்துதல்:

* மலேசியாவின் அமலாக்க நிறுவனங்களுக்குள் ஒருமைப்பாடு, பொறுப்புணர்வு, தொழில்முறையை ஊக்குவிப்பதில் அமலாக்க நிறுவனம் ஒருமைப்பாடு ஆணையம் (EAIC) ஒரு முக்கிய பங்கைத் தொடர்ந்து வகிக்கிறது. நல்லாட்சியை வலுப்படுத்தும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டிற்கு இணங்க, EAIC நாட்டின் எல்லைச் செயல்பாடுகளில் உள்ள செயல்பாட்டுச் சவால்களைப் புரிந்துகொள்வதற்கும் கையாள்வதற்கும் அதன் விவேகக் கூட்டாண்மையை தீவிரப்படுத்தியுள்ளது.

* மறுபுறம், தேசிய ஆளுமைக்கான சிறப்புக் அமைச்சரவைக் குழு (JKKTN) மூலம் அரசாங்கம், ஒத்திவைக்கப்பட்ட வழக்குத் தொடரும் ஒப்பந்தம் (DPA) நடைமுறையை குற்றவியல் நடைமுறைச் சட்டம், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) சட்டம் 2009 இல் அறிமுகப்படுத்துவதற்கான முன்மொழிவுக்குக் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முடிவைத் தொடர்ந்து, பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு, முன்மொழிவை திறம்படச் செம்மைப்படுத்துவதற்கும் செயல்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனும் முக்கிய பங்குதாரர்களுடனும் தீவிரமாக ஈடுபாட்டு அமர்வுகளை நடத்தி வருகிறது. இந்த முன்முயற்சி, சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்துதல், கூட்டுறவுப் பொறுப்புணர்வை மேம்படுத்துதல், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை உறுதிச் செய்வதற்கான அரசாங்கத்தின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது.

உலகளாவிய போட்டித்திறனில் ஓர் உந்துதல்

மலேசியா IMD உலகப் போட்டித்திறன் தரவரிசை 2025-ல் 11 இடங்கள் உயர்ந்து - 2024 இல் 34வது இடத்தில் இருந்து இந்த ஆண்டு 23வது இடத்திற்கு உயர்ந்து - ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அடைந்துள்ளது. இந்த முக்கியமான முன்னேற்றம் மலேசியாவின் வலுவூட்டப்பட்டப் பொருளாதார செயல்திறனையும் பயனுள்ள ஆளுமையையும் பிரதிபலிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், நாடு ஊழல் குறிகாட்டியில் 12 இடங்கள் முன்னேறி 34வது இடத்திற்கு உயர்ந்து நேர்மறையான முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது.

பகுப்பாய்வாளர்கள் வலுவான பொருளாதார செயல்திறன், முக்கியமாக, மேம்படுத்தப்பட்ட அரசாங்க செயல்திறன் ஆகியவற்றை முக்கிய உந்துசக்திகளாகக் குறிப்பிட்டுள்ளனர். இந்த எழுச்சி, CPI சிறப்புக் குழுவால் ஆதரிக்கப்பட்ட ஆளுமைச் சீர்திருத்தங்கள் அனைத்துலக அளவில் எதிரொலிக்கின்றன என்பதையும், மலேசியாவை முதலீட்டிற்கு மிகவும் கவர்ச்சிகரமான இடமாக மாற்றுவதில் நேரடியாகத் தொடர்பு கொண்டுள்ளன என்பதையும் நிரூபிக்கிறது.

2033 நோக்கிய நீண்ட பயணம்

2024 ஆம் ஆண்டிற்கான மலேசியாவின் சிபிஐ மதிப்பெண் 100-க்கு 50 ஆக மாறாமல் இருந்தாலும், நாட்டின் முழுமையான அணுகுமுறையும் ஆழமான சீர்திருத்தங்களுடனும் சிபிஐயில் முதல் 25-க்குள் இருக்க வேண்டும் என்ற தேசிய விருப்பம் உணரப்படலாம். இந்த கவனம் செலுத்தும் குழுக்கள் இப்போது மலேசியாவின் முன்னேற்றங்களை சிறப்பாக வடிவமைக்க ஆளுமை இடைவெளிகளின் விரிவான பகுப்பாய்வுகளை மேற்கொள்வதற்கான பணியில் உள்ளன.

அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் கோடிட்டுக் காட்டியுள்ளபடி, முன்னேற்றப் பாதை, அரசு ஊழியர்கள் பணிபுரியும் விதம், சிந்திக்கும் விதம் இவற்றில் ஓர் அடிப்படை மாற்றத்தை, ஊழலுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய இடைவெளிகளை மூடுவதற்கும் பொது நம்பிக்கையை மீட்டெடுப்பதற்கும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதைக் கோருகிறது.

இப்போதைக்கு, சிறப்புக் குழுவின் தொடக்கநிலை வெற்றிகள், நல்லாட்சி, ஒருமைப்பாடு மீதான மலேசியாவின் நற்பெயரை மேம்படுத்துவதற்கான அதன் பணிக்கு ஒரு நம்பகமான அடித்தளத்தை வழங்குகிறது.

Related News