Apr 27, 2026
Thisaigal NewsYouTube
மஹிமாவின் புதிய தலைவராக டத்தோ சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்
சிறப்பு செய்திகள்

மஹிமாவின் புதிய தலைவராக டத்தோ சிவகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்

Share:

கோலாலம்பூர், அக்டோபர் 14-

நாடு முழுவதும் உள்ள ஆலயங்களை ஒன்றிணைத்து, ஒற்றுமையாக - ஒரே குரலாக செயல்படுவது, ஆலயங்கள் எதிர்நோக்கி வரும் பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்கு தீர்வு காண்பதற்கான வழிவகைகளை ஆராய்வது, அவற்றின் நிர்வாகங்களை சந்திப்பது, இணைய அகப்பக்கம் ஒன்றை திறப்பது உட்பட ஆலயங்களின் ஒருங்கிணைப்பு பேரவையாக இளையோர்களை முன்னிலைப்படுத்தும் வகையில் மஹிமா செயல்படும் என்று அதன் புதிய தலைவர் டத்தோ N. சிவகுமார் தெரிவித்தார்.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகளின் ஒருங்கிணைப்பு பேரவையான மஹிமாவின் ஈராண்டுக்கு ஒரு முறை நடைபெறும் அதன் பொதுக்கூட்டம், டான்ஸ்ரீ டத்தோ டாக்டர் ஆர். நடராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆண்டுக்கூட்டத்தில் இளையோர்களுக்கு வழிவிடும் வகையில் டான்ஸ்ரீ நடராஜா, தலைமைப் பதவிக்கு மீண்டும் போட்டியிடவில்லை. இந்நிலையில் மஇகாவின் தேசியப் பொருளாளராக டத்தோ சிவகுமார், மஹிமாவின் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் கோவில் தேவஸ்தானம், தாய்கோவிலாக விளங்கியப் போதிலும் அக்கோவிலையை மட்டும் மையமாக கொண்டு நாட்டில் உள்ள ஆலயங்கள் எதிர்நோக்கக்கூடிய பிரச்னைகளை கண்டறிய முடியாது. தீர்வுக்காண இயலாது.

எனவேதான் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மஹிமா என்ற ஓர் அமைப்பு நிறுவப்பட்டு, அதன் வாயிலாக ஆலயங்கள் இணைக்கப்பட்டு, ஒரே குறிகோளுடன் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் மஹிமா தொடங்கப்பட்டதாக டான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

மஹிமாவின் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள டத்தோ சிவகுமார், செய்தியாளர்களிடம் பேசுகையில் நாடு முழுவதும் உள்ள ஆலயங்களை ஒன்றிணைக்கும் வகையில் மஹிமா பொறுப்பாளர்கள் Road Show போன்ற பயணத்தை தொடங்கவிருப்பதாக குறிப்பிட்டார்.

இப் பயணத்தின் போது ஆலய நிர்வாகிகளை சந்தித்து பேசுவதுடன் அங்கு உள்ள பிரச்சினைகளும் கண்டறியப்படும் என்று டத்தோ சிவகுமார் விவரித்தார்.

மஹிமாவின் இந்த பொதுக்கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் முக்கிய அங்கமாக புதிய நிர்வாகக் குழு தேர்வு செய்யப்பட்டது.

Caption

டத்தோ N. சிவகுமார்,
மஹிமா புதியத் தலைவர்

Related News

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

SPRM ஊடக விருது: 'திசைகள்' ஊடகத்திற்கு நற்சான்றிதழ் வழங்கி கௌரவம்

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

சர்வதேச அரங்கில் லுனாஸ் - கெடா இந்திய மாணவர்களின் மகத்தான சாதனை: டத்தோ ஶ்ரீ ரமணன் நேரில் அழைத்துப் பாராட்டு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

மாநிலங்களில் 10 மின் சுடலைகள்: பிரதமர் அன்வார் இப்ராஹிம் 20 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு