Jun 25, 2026
Thisaigal NewsYouTube
எடிசன் திரை விருது விழாவிற்கு பினாங்கு முதலமைச்சருக்கு அழைப்பு
சிறப்பு செய்திகள்

எடிசன் திரை விருது விழாவிற்கு பினாங்கு முதலமைச்சருக்கு அழைப்பு

Share:

ஜார்ஜ்டவுன், மார்ச்.05-

பினாங்கு மாநிலத்தில் வரும் ஏப்ரல் 5 ஆம் தேதி மாலையில் ஸ்பைஸ் அரேனா அரங்கில் 17 ஆம் ஆண்டு எடிசன் திரை விருதளிப்பு விழா நடைபெற உள்ளது.

இந்நிகழ்விற்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த ரசிகர்களும், மலேசிய ரசிகர்களும் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிகழ்விற்கு 50க்கும் மேற்பட்ட நடிகர் நடிகைகள், இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் கலந்து கொண்டு விருது மற்றும் கலை நிகழ்வுகளை படைக்க உள்ளனர்.

இந்நிகழ்வில் கனடா, ஆஸ்திரேலியா, மலேசிய இந்திய கலைஞர்களும், கலை நிகழ்வு நடத்த உள்ளனர். இம்மாபெரும் விழாவிற்கு பினாங்கு மாநில முதல்வர் சோவ் கோன் யோவ் துவக்கி வைக்கவும், பினாங்கு மாநில வீட்டு வசதி துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சுந்தரராஜு தலைமையில், சுற்றுலாத்துறை அமைச்சர் வோங் ஹொன் வாயும் கலந்து கொள்ள இசைவு தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்விற்கு துவக்கி வைக்க இசைவு தெரிவித்ததற்கு எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் மற்றும் நகைச்சுவை நடிகர் சதீஷ் ஆகியோர் இணைந்து முதலமைச்சருக்கு அழைப்பு விடுத்தனர்.

இந்நிகழ்ச்சியை கண்டு களிக்க Myticket Asia என்ற இணையத்தளம் மூலம் டிக்கெட்டுகளைப் பெறலாம் என எடிசன் விருது குழுத் தலைவர் செல்வகுமார் தெரிவித்துள்ளார். தொடர்புக்கு +601661677 08.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!