Jun 25, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!
சிறப்பு செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அமனா இக்தியார் மலேசியா முன்மொழிந்த உணவு கூடை திட்டத்திற்கான 5 லட்சம் நிதி ஒதுக்கீட்டை மித்ரா அங்கீகரித்துள்ளது.

இந்த நிதி உதவியானது, B40 பிரிவைச் சேர்ந்த 5,000 பயனாளர்களுக்கு உணவு கூடை வடிவில் வழங்கப்படவுள்ளது.

இது, சமூக நலன் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஒரு முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 19, 2025 தேதியிட்ட கடிதத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முதன்மை தனிச் செயலாளர் ஷாரோல் அனுவார் சார்பான், இந்த நிதியை ஒதுக்குமாறு மித்ரா தலைமை இயக்குநர் ஜி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பதை மலேசியாகினி உறுதிப்படுத்தியுள்ளது.

மித்ரா மற்றும் அமானா இக்தியார் மலேசியா இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம், தீபாவளி திருநாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும், சமூக ஒருமைப்பாட்டின் ஒரு வடிவமாகும் என்றும், இந்த முயற்சி மடானி அரசின் சமூகக் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!