Oct 18, 2025
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!
சிறப்பு செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அமனா இக்தியார் மலேசியா முன்மொழிந்த உணவு கூடை திட்டத்திற்கான 5 லட்சம் நிதி ஒதுக்கீட்டை மித்ரா அங்கீகரித்துள்ளது.

இந்த நிதி உதவியானது, B40 பிரிவைச் சேர்ந்த 5,000 பயனாளர்களுக்கு உணவு கூடை வடிவில் வழங்கப்படவுள்ளது.

இது, சமூக நலன் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஒரு முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 19, 2025 தேதியிட்ட கடிதத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முதன்மை தனிச் செயலாளர் ஷாரோல் அனுவார் சார்பான், இந்த நிதியை ஒதுக்குமாறு மித்ரா தலைமை இயக்குநர் ஜி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பதை மலேசியாகினி உறுதிப்படுத்தியுள்ளது.

மித்ரா மற்றும் அமானா இக்தியார் மலேசியா இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம், தீபாவளி திருநாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும், சமூக ஒருமைப்பாட்டின் ஒரு வடிவமாகும் என்றும், இந்த முயற்சி மடானி அரசின் சமூகக் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related News

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங்  தகவல்

50 இந்திய கிராமங்களில் மேம்பாட்டுத் திட்டங்களுக்கு 15 மில்லியன் ரிங்கிட் அங்கீகாரம்: அமைச்சர் ங்கா கோர் மிங் தகவல்

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

கூலிம் மாவட்டத்தில் தீபாவளி அலங்கரிப்புகள் இல்லையா? மக்கள் நீதிக் கட்சி கேள்வி!

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

தீபாவளியையொட்டி தமிழ் ஊடகங்களைச் சேர்ந்த 16 பேர் நிதி உதவிப் பெற்றனர்

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

அக்டோபர் 18 ஆம் தேதி இலக்கவியல் அமைச்சின் தீபாவளி பொது உபசரிப்பு

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

மாணவர்களின் முகத்தில் சிரிப்பு மலர்வதே எங்களின் வெற்றி” – டத்தோ ந.சிவக்குமார் நெகிழ்ச்சி

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்

இராமகிருஷ்ண ஆசிரம பிள்ளைகளுக்கு தீபாவளி புத்தாடைகளை வழங்கினார் ஆர்எஸ்என் ராயர்