Jan 21, 2026
Thisaigal NewsYouTube
தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!
சிறப்பு செய்திகள்

தீபாவளியை முன்னிட்டு அமனா இக்தியாரின் உணவுக் கூடைத் திட்டத்திற்கான 5 லட்சம் ரிங்கிட் நிதியை அங்கீரித்தது மித்ரா!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.18-

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, அமனா இக்தியார் மலேசியா முன்மொழிந்த உணவு கூடை திட்டத்திற்கான 5 லட்சம் நிதி ஒதுக்கீட்டை மித்ரா அங்கீகரித்துள்ளது.

இந்த நிதி உதவியானது, B40 பிரிவைச் சேர்ந்த 5,000 பயனாளர்களுக்கு உணவு கூடை வடிவில் வழங்கப்படவுள்ளது.

இது, சமூக நலன் மற்றும் பொருளாதார ரீதியில் பின்தங்கியவர்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஒரு முக்கிய ஆதரவாகக் கருதப்படுகிறது.

கடந்த செப்டம்பர் 19, 2025 தேதியிட்ட கடிதத்தில், பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமின் முதன்மை தனிச் செயலாளர் ஷாரோல் அனுவார் சார்பான், இந்த நிதியை ஒதுக்குமாறு மித்ரா தலைமை இயக்குநர் ஜி. பிரபாகரனிடம் கோரிக்கை வைத்திருந்தார் என்பதை மலேசியாகினி உறுதிப்படுத்தியுள்ளது.

மித்ரா மற்றும் அமானா இக்தியார் மலேசியா இணைந்து செயல்படுத்தும் இத்திட்டம், தீபாவளி திருநாளின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும், சமூக ஒருமைப்பாட்டின் ஒரு வடிவமாகும் என்றும், இந்த முயற்சி மடானி அரசின் சமூகக் கொள்கைகளை பிரதிபலிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

Related News

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

கல்விப் புரட்சியின் நாயகன்: அன்வாரின் தொலைநோக்கும் நாளைய மலேசியாவும்

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தேவஸ்தானத்திற்கு பழைய சட்டமே முக்கியம் என்றால், கோலாலம்பூரில் எத்தனை மாட்டு வண்டிகள் ஓடுகின்றன?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தடம் மாறும் அம்னோ - பாரம்பரியப் பெருமையா அல்லது இனவாத அரசியலா?

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

தமிழ்ப்பள்ளி மாணவர் எண்ணிக்கைச் சரிவு: கவலை தரும் புள்ளி விவரங்களும் கண்டறியப்பட வேண்டிய உண்மைகளும்

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சிலாங்கூர் மாநில அளவிலான பொங்கல் விழா: மந்திரி பெசார் டத்தோ ஶ்ரீ அமிருடின் ஷாரி பங்கேற்பு

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்

சென்னை உலகத் தமிழர் திருநாள் மாநாடு: தமிழக முதல்வர் கைகளால் பினாங்கு மாநில அரசுக்கு உயரிய அங்கீகாரம்