Aug 12, 2026
Thisaigal NewsYouTube
திரியாங் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர திருவிழா
ஆன்மிகம்

திரியாங் ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர திருவிழா

Share:

பகாங், பெரா, த்ரியங் , ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தின் ஆடிப்பூர திருவிழா வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை வெகு விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இதனையொட்டி முதல் நாளான நாளை ஆகஸ்ட் 13 ஆம் தேதி வியாழக்கிழமை இரவு 8.00 மணியளவில் ஆலய வளாகத்தில் மாபெரும் கலை நிகழ்ச்சி நடைபெறவிருக்கிறது. இக்கலை விழாவை பகாங் மாநில ஒற்றுமை, சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் லியாங் யூ மேன் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கவிருக்கிறார்.

மேலும், இவ்விழாவில் கோலாலம்பூர் ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் தேவஸ்தானத்தின் அறங்காவலரும், மஹிமா தலைவருமான டத்தோ என்.சிவக்குமாரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்.

லியாங் யூ மேன்– னுடன் இக்கலை விழாவிற்கு பகாங், பெரா மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் டி.எஸ்.பி குமரன் ஞானசேகரன் சிறப்பு வருகை புரியவிருக்கிறார் என்று ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

Related News