ரஞ்சி கோப்பைக்கான போட்டிகள் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகின்றன. கோவையில் நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு- ரெயில்வேஸ் அணிகள் மோதின.
இதில் தமிழ்நாடு அணி இன்னிங்ஸ் மற்றும் 129 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஜெகதீசன் ஆட்டமிழக்காமல் இரட்டை சதம் (245) அடிக்க தமிழ்நாடு முதல் இன்னிங்சில் 489 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ரெயில்வேஸ் அணி 246
ரன்னில் ஆல்அவுட் ஆனது. சாய் கிஷோர், வாரியார் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.