Jul 29, 2026
Thisaigal NewsYouTube
காலிறுதிக்கு முன்னேறினர் ஆரோன் சியா-சோ வூய் யிக்
விளையாட்டு

காலிறுதிக்கு முன்னேறினர் ஆரோன் சியா-சோ வூய் யிக்

Share:

கோலாலம்பூர், ஜூலை.24-

நாட்டின் முதல் நிலை ஆடவர் இரட்டையர்களான ஆரோன் சியா-சோ வூய் யிக் சீன பொது பூப்பந்து போட்டியின் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அதன் வழி அவர்கள், தங்கள் முதல் சூப்பர் 1000 பட்டத்திற்கான வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

இரண்டாவது சுற்றில், உலகின் இரண்டாவது நிலை ஜோடியான, பிரான்ஸ் சகோதர்களான கிறிஸ்டோ போபோவ்-டோமா ஜூனியர் போபோவை 21-17, 21-18 என்ற செட் கணக்கில் அவர்கள் தோற்கடித்தனர்.

இதற்கு முன் மலேசிய பூப்பந்து போட்டி, அகில இங்கிலாந்து பூப்பந்து போட்டி, இந்தோனேசிய பொது பூப்பந்து போட்டி ஆகியவற்றில் தொடக்கக் கட்டத்திலேயே வெளியேறிய ஏரோன் சியா- சோ வூய் யிக் இம்முறை போராட்ட உணர்வுடன் களமிறங்கியுள்ளனர்.

ஈராண்டுகளுக்கு முன் அவர்கள் சீன பொது பூப்பந்து போட்டியில் மிகச் சிறந்த அடைவு நிலையாக இரண்டாம் இடத்தை வென்றனர். கடந்த ஆண்டு வூய் யிக் காயமடைந்ததால் அவர்கள் போட்டியில் பங்கேற்கவில்லை.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு