பாரிஸ், ஆகஸ்ட்.29-
நாட்டின் மகளிர் இரட்டையர்களான பெர்லி டான்-எம். தீனா உலகப் பூப்பந்து போட்டியின் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளனர். மூன்றாம் சுற்று ஆட்டத்தில் அவ்விருவரும் பல்கேரிய வீராங்கனைகளைச் சந்தித்தனர். அதில் நேரடி செட்களில் மலேசிய இணை வாகை சூடியது.
நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில், பெர்லி டான்-எம். தீனா ஜப்பானிய ஜோடியுடன் களம் காணவிருக்கின்றனர்.
இதனிடையே, ஆடவர் இரட்டையர் பிரிவில் ஆரோன் சியா-சோ வொய் யிக் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.