இந்தியாவில் கிரிக்கெட் என்ற விளையாட்டு அறிமுகமான காலத்தில் இந்திய அணியில் இடம்பிடிக்க உடற்தகுதி அவசியமில்லாமல் இருந்திருக்கலாம்.
ஆனால், இன்று நிலைமை முற்றிலும் வேறாக மாறிவிட்டது. கிரிக்கெட்டில் உடற்தகுதி மிகவும் அவசியம் என்ற காலம் இது. இதற்கு உச்சக்கட்ட உதாரணமாக இந்திய வீரர் விராட் கோலி இருக்கிறார்.
இவர் தலைமையிலான இந்திய அணியில் இடம்பிடிக்க வீரர்கள் யோயோ ஃபிட்னஸ் டெஸ்ட் எனும் சோதனையில் தேர்ச்சி பெற வேண்டிய அவசியம் இருந்தது. எனினும், இந்திய கேப்டன்
ரோகித் சர்மா ஃபிட்னஸ் குறித்த கேள்வி நீண்ட காலமாக எழுப்பப்பட்டு வருகிறது.
ரோகித் சர்மா எத்தனை போட்டிகளில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியும், இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து நீடிக்கிறது.