Oct 19, 2025
Thisaigal NewsYouTube
காரணம் இல்லாமல் லீவு கேட்கும் வீரர் அல்ல- கோலிக்கு ஆதரவு அளிப்போம்- ஜெய்ஷா
விளையாட்டு

காரணம் இல்லாமல் லீவு கேட்கும் வீரர் அல்ல- கோலிக்கு ஆதரவு அளிப்போம்- ஜெய்ஷா

Share:

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனான விராட் கோலி முதல் முறையாக டெஸ்ட் தொடரில் இருந்து முழுமையாக விலகி உள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் ஆடவில்லை.

தொடர்ந்து எஞ்சிய 3 டெஸ்டிலும் விளையாடமாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அவர் எதற்காக விலகினார் என்ற காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இந்தநிலையில் விராட் கோலிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி. சி.சி.ஐ) தொடர்ந்து ஆதரவு அளிக்கும் என்று அதன் செயலாளர் ஜெய்ஷா கூறியுள்ளார்.

Related News