கோலாலம்பூர், அக்டோபர்.02-
வரும் அக்டோபர் 4, 5 ஆம் தேதிகளில் கோலாலம்பூர் மாநகரில் சில சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Kuala Lumpur Standard Chartered Marathon 2025 நெடுந்தூர ஓட்டம் மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான Le Tour de Langkawi சைக்கிளோட்டப் போட்டி ஆகிய இரு நிகழ்வுகளையொட்டி தலைநகரில் அவ்விரு தினங்களிலும் சாலைகள் கட்டம் கட்டமாக மூடப்படவிருப்பதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ ஃபாடில் மர்சுஸ் தெரிவித்தார்.
இவ்விரு நிகழ்வுகளிலும் மூவாயிரத்து 300 அனைத்துலகப் போட்டியாளர்கள் உட்பட சுமார் 40 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.