இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையிலான 3வது டி20 போட்டி பெங்களூருவில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 212 ரன்கள் குவித்தது. பவர் பிளேயில் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து திணறியது.
22 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.
5வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மாவுடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அதிரடியாக ஆடி அணியை மீட்டது.