கலிஃபோர்னியா, அக்டோபர்.16-
அமெரிக்கா, ரெட்வுட் சிட்டியில் நடைபெற்ற சிலிக்கோன் வெல்லி பொது ஸ்குவாஷ் போட்டியின் இறுதியாட்டத்தில் தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி தோல்வி கண்டார். நாட்டின் முதல் நிலை வீராங்கனையான அவர் இவ்வாண்டு இரண்டாவது பட்டத்தை வெல்லும் நிலையை நெருங்கியிருந்தார். இருப்பினும் அவர் அவ்வாய்ப்பைத் தவற விட்டார். இறுதியாட்டத்தில் சிவசங்கரி உபசரணை நாட்டு வீராங்கனை ஒலிவியா வேவெரிடம் தோல்வியுற்றார்.
அவ்வாட்டத்தில் சிவசங்கரி கடும் போட்டியைக் கொடுத்தார். அவர் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், இறுதியில் வெற்றி அவர் வசம் ஆகவில்லை. சிவ்சங்கரியும் ஒலிவியாவும் இதுவரை ஒன்பது ஆட்டங்களில் சந்தித்துள்ளனர். அவற்றில் எட்டில் சிவசங்கரி தோல்வி கண்டுள்ளார்.