சாங்ஸோ, ஜூலை.26-
நாட்டின் ஆடவர் இரட்டையர் பிரிவு வீரர்களான ஏரோன் சியா- சோ வுய் யிக் சீன பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். அரையிறுதி ஆட்டத்தில் அவர்கள் இந்திய வீரர்களைத் தோற்கடித்தனர். அவ்வாட்டம் 41 நிமிடங்களில் ஏரோன் சியா-வுய் யிக் வசமானது.
இவ்வேளையில் இறுதியாட்டத்தில் ஏரோ சியா- சோ வுய் யிக் இந்தோனேசிய ஜோடியைச் சந்திக்கவிருக்கின்றனர்.