Jul 29, 2026
Thisaigal NewsYouTube
போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்
விளையாட்டு

போட்டிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜூலை.12-

தேசிய மகளிர் இரட்டையர் பிரிவு வீராங்கனைகளான பெர்லி தானும் எம்.தீனாவும் பயிற்சி மற்றும் போட்டிகளில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர் ஹான்னா இயோ கேட்டுக் கொண்டுள்ளார். அவ்விருவரும் பிஏஎம் எனும் மலேசிய பூப்பந்து சங்கத்துடன் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடுள்ளனர். பிஏஎம்முடன் இதுநாள் வரை நீடித்து வந்த இழுபறி நிலை இறுதியாக சுமூகமாக முடிந்துள்ளதைத் தாம் வரவேற்பதாக அவர் குறிப்பிட்டார்.

அவ்விருவரும் அடுத்தக் கட்டத்தை நன்கு திட்டமிட்டு நகர வேண்டும். பயிற்சிகளிலும் போட்டிகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என ஹான்னா இயோ கேட்டுக் கொண்டார். விளையாட்டாளர்களின் நலனைத் தொடர்ந்து பேணி வரும் பிஏஎம்மின் கடப்பாட்டை அவர் பாராட்டினார்.

பெர்லி தானும் எம்.தீனாவும் ரோட் டு கோல்ட் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனர். அதனை எதிர்கொள்ள அவர்கள் வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாரவர். அவர்கள் இருவரும் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டி வரை பிஏஎம்மில் இருப்பர்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு