Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஃபிஃபாவின் தடைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மலேசியக் கால்பந்தாட்ட சங்கம் உறுதி!
விளையாட்டு

ஃபிஃபாவின் தடைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மலேசியக் கால்பந்தாட்ட சங்கம் உறுதி!

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.07-

சர்வதேச கால்பந்தாட்டக் கூட்டமைப்பான ஃபிஃபா விதித்துள்ள தடைகளை எதிர்த்து மேல்முறையீடு செய்வதில் தாங்கள் உறுதியாக இருப்பதாக மலேசியக் கால்பந்தாட்டச் சங்கம் அறிவித்துள்ளது.

கால்பந்தாட்ட அமைப்பு மற்றும் தங்களது ஏழு கலப்பு பாரம்பரிய வீரர்களுக்கு எதிரான ஃபிஃபாவின் குற்றச்சாட்டில், இதுவரை எந்த ஓர் ஆதாரமும் காட்டப்படவில்லை என்றும் கால்பந்தாட்டச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

அதே வேளையில், தங்களது வீரர்கள் போலி ஆவணங்களைப் பெற்றனர் என்றும், தகுதி விதிகளை மீற முயன்றனர் என்றும் ஃபிஃபா குற்றம் சாட்டியுள்ளதற்கு மலேசியக் கால்பந்தாட்டச் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தங்களது மீதான குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்பதை நிரூபிக்கத் தேவையான அனைத்து ஆவணங்களுடன் மேல்முறையீடு செய்யத் தயாராகி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு