Jun 18, 2026
Thisaigal NewsYouTube
உலகிலேயே அதிக சொத்துக்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்
உலகச் செய்திகள்

உலகிலேயே அதிக சொத்துக்களை வைத்திருக்கும் ஒரே குடும்பம்

Share:

இங்கிலாந்து, மே 09-

உலகின் அதிக நிலம் வைத்திருக்கும் நபர் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

காடுகளில் அலைந்து திரிந்த மனிதன் ஆற்றங்கரையில் தங்கி விவசாயம் செய்து வாழ தொடங்கியதில் இருந்து நிலத்தின் மீது உரிமை கொள்ள ஆரம்பித்துவிட்டான். தான் இறப்பதற்குள் சொந்தமாக நிலம் வாங்க வேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது. ஆனால் உலகின் அதிக நிலம் வைத்திருக்கும் நபர் யார் தெரியுமா? இதுகுறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உலகில் அதிக நிலம் கொண்டவர்கள் மிகவும் பிரபலமானவர்கள் தான். சொல்லப்போனால் இவர்களிடம் ஒரு காலத்தில் பாதி உலகமே இருந்தது என்று சொல்ல வேண்டும். இன்று பாதி உலகத்தின் ஆட்சி அதிகாரம் இல்லை என்றாலும் நிலங்கள் வாங்கி அதிகாரங்களை கொண்டுள்ளனர். அவர்கள் வேறு யாருமில்லை.

இங்கிலாந்தின் அரச குடும்பம் தான் உலகிலேயே அதிகமான நிலங்களை சொத்து வைத்திருப்பவர்கள் ஆவர். கிராமப்புற விவசாய நிலங்கள், காடுகள், நகர்ப்புறங்களில் நிலம், வீடுகள் மற்றும் ஆடம்பரமான சந்தை வளாகங்கள், கடற்கரைகள் கூட அவர்களுக்கு சொந்தமாக உள்ளதாம். உலகம் முழுவதும் உள்ள நிலங்களையும், சொத்துக்களையும் கண்காணிக்க ஒரு நிறுவனம் இயங்கி வருகிறது.

பிரிட்டனின் மன்னர் மூன்றாம் சார்லஸ் ஆவார். அவரின் தாயார் இரண்டாம் எலிசபெத் ராணி இறந்த பின்னர் மன்னராக முடிசூட்டப்பட்ட இவர் தான் உலகின் அதிக நிலங்களுக்கு சொந்தக்காரர். அவர் இந்த சொத்தின் உரிமையாளராக இருந்தாலும், அவரின் தனிப்பட்ட உரிமையாளர் அல்ல.

அவர் மன்னராக இருக்கும் வரை இந்த சொத்து அனைத்தும் அவரின் சொத்தாக கருதப்படும். இன்சைடர் உள்ளிட்ட பல வர்த்தக வலைதளங்களின் படி இளவரசர் சார்லஸ் உலகம் முழுவதும் 6.6 பில்லியன் ஏக்கர் நிலம் மற்றும் சொத்துக்களை வைத்திருக்கிறார். இந்த நிலங்கள் கிரேட் பிரிட்டன், ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ், கனடா, ஆஸ்திரேலியா மற்றும் பல நாடுகளில் சொத்துக்கள் உள்ளன. உலகின் மொத்த செல்வத்தில் 16.6 சதவீதம் சொத்து பிரிட்டிஷ் மன்னரிடம் உள்ளது.

The Crown Estate என்ற அமைப்பு இந்த முழு சொத்தையும் கவனித்து பராமரிக்கிறது. பிரிட்டிஷ் அரச குடும்பம் 2,50,000 ஏக்கர் நிலத்தை நேரடியாக கையாள்கிறது. மற்றவை 115000 ஏக்கர் நிலம் விவசாயம் மற்றும் காடுகளாக உள்ளன. பல்வேறு ஷாப்பிங் செண்டர்களை நடத்தி வருகிறது. மணல், சரளை, சுண்ணாம்பு, கிரானைட், செங்கல், களிமண், நிலக்கரி போன்ற வர்த்தகங்களையும் செய்து வருகிறது.

கிரவுன் எஸ்டேட் என்பது ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள நிறுவனமாகும். iது மன்னருக்கு சொந்தமான நிலங்கள் மற்றும் உடைமைகளை வைத்திருக்கிறது. இது இங்கிலாந்து அரச குடும்பத்தின் சொத்துக்களை கண்காணித்து வருகிறது.
இங்கிலாந்து அரச குடும்பத்திற்கு பிறகு சவுதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா இருக்கிறார். அவர் தனிப்பட்ட முறையில் 8,30,000 சதுர மைல்களை ஆட்சி செய்கிறார். எண்ணெய் வியாபாரம் செய்து வரும் சவுதி மன்னரின் குடும்பம் உலகின் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக உள்ளது.

Related News

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

மகனின் உடலை எழுப்ப முயன்ற தந்தையின் நெஞ்சையுருக்கும் பாசம்

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்