தென் அமெரிக்கா, ஆகஸ்ட்.22-
தென் அமெரிக்காவில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 7.5 ஆகப் பதிவாகியுள்ளது.
தென் அமெரிக்காவுக்கும், அண்டார்டிகாவுக்கும் இடையே உள்ள டிரேக் பாசேஜ் பகுதியில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. பூமிக்கு அடியில் சுமார் 10.8 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
முதலில் ரிக்டர் அளவுகோலில் 8 என்ற அளவில் மதிப்பிடப்பட்ட இந்த நிலநடுக்கம் பிறகு, 7.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச் சேதமோ, பொருட் சேதமோ ஏற்பட்டதாக இதுவரையில் எந்தத் தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை.