Apr 19, 2026
Thisaigal NewsYouTube
ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளியான தகவல்
உலகச் செய்திகள்

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் தொடர்பில் வெளியான தகவல்

Share:

ஹமாஸ் தலைவரின் இறுதி ஊர்வலம் ஈரான் நாட்டு உயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி (Ayatollah Ali Khamenei) தலைமையில் நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இஸ்ரேலின் தாக்குதலில் காசாவில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 39,445 என ஹமாஸ் நடத்தும் பிராந்தியத்தின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.

இஸ்ரேல் மறுப்பு

ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியே (Ismail Haniyeh) கொல்லப்பட்டதற்கு இஸ்ரேல் மீது ஈரான் குற்றம்சாட்டியுள்ளது.

இந்நிலையில், இஸ்மாயில் ஹனியேயின் உடல் தோஹாவில் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, அவரின் இறுதி ஊர்வலம் ஈரான் தலைவர் அயத்துல்லாவின் தலைமையில் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தெஹ்ரான் தாக்குதல் குறித்து இஸ்ரேல் கருத்து தெரிவிக்க மறுத்த நிலையில், ''ஈரான் எனும் இஸ்லாமிய குடியரசின் பிரதேசத்தில், தியாகியாகிய இஸ்மாயில் ஹனியேயின் இரத்தத்திற்கு பழிவாங்குவது எங்கள் கடமை'' என ஈரான் நாட்டு தலைவர் அயதுல்லா சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அதிகாலை முதல் ஹனியேவின் படுகொலையைக் கண்டித்து மக்கள் பலர், ஈரான் முழுவதும் உள்ள நகரங்களில் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது தெஹ்ரானின் பாலஸ்தீன சதுக்கத்தில் கூடிய நூற்றுக்கும் மேற்பட்டோர், ''இஸ்ரேலுக்கு மரணம், அமெரிக்காவுக்கு மரணம்'' என எச்சரிக்கை வெளியிட்டுள்ளனர்.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு