May 6, 2026
Thisaigal NewsYouTube
1எம்டிபி நிதி மோசடி: முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் அமெரிக்க அதிபர் மன்னிப்பிற்கு விண்ணப்பம்
உலகச் செய்திகள்

1எம்டிபி நிதி மோசடி: முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் அமெரிக்க அதிபர் மன்னிப்பிற்கு விண்ணப்பம்

Share:

வாஷிங்டன், ஜனவரி.23-

1எம்டிபி நிறுவனத்தில் நடந்த மாபெரும் நிதி மோசடியில் தனது பங்களிப்பை ஒப்புக் கொண்ட Goldman Sachs Group Inc நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளரான Tim Leissner, மத்திய சிறையில் சரணடைவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபரின் மன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பதிவுகளின் படி, Leissner-இன் விண்ணப்பமானது, கடந்த ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் நவம்பர் 18 ஆகிய தேதிகளுக்கு இடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோல்ட்மேன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியத் தலைவராகப் பணியாற்றிய Leissner, 1எம்டிபி நிறுவனத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தவறாகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற குற்றச்சாட்டை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவர் அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒத்துழைத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு, நியூயார்க்கின் Brooklyn நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், கோல்ட்மேன் நிறுவனத்தில் பணியாற்றிய தனது சக ஊழியரான Roger Ng-க்கு எதிராக ஒரு முக்கிய சாட்சியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தமிழகத்தில் ‘தளபதி’ ஆட்சி? காங்கிரஸுடன் ரகசிய பேச்சுவார்த்தை: கவர்னருக்குப் பறந்தது கடிதம்

தமிழகத்தில் ‘தளபதி’ ஆட்சி? காங்கிரஸுடன் ரகசிய பேச்சுவார்த்தை: கவர்னருக்குப் பறந்தது கடிதம்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

மலாயன் புலிகள் பாதுகாப்பு மையத்தை பார்வையிட்ட லீ சியென் லூங்

ஆட்சியமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை – என்ன செய்யப் போகிறது தவெக?

ஆட்சியமைக்க இன்னும் 10 தொகுதிகள் தேவை – என்ன செய்யப் போகிறது தவெக?

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த  வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

50 ஆண்டுகால திராவிட அரசியலில் புயலெனப் புகுந்த வஜேய்யின் ‘தவெக’ / 105 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றியை நோக்கி முன்னேறுகிறது விஜய்யின் வீட்டில், போலீஸ் குவிப்பு / பலத்த பாதுகாப்பு

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை

தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரம்: 100-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் தவெக முன்னிலை