Mar 13, 2026
Thisaigal NewsYouTube
1எம்டிபி நிதி மோசடி: முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் அமெரிக்க அதிபர் மன்னிப்பிற்கு விண்ணப்பம்
உலகச் செய்திகள்

1எம்டிபி நிதி மோசடி: முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் அமெரிக்க அதிபர் மன்னிப்பிற்கு விண்ணப்பம்

Share:

வாஷிங்டன், ஜனவரி.23-

1எம்டிபி நிறுவனத்தில் நடந்த மாபெரும் நிதி மோசடியில் தனது பங்களிப்பை ஒப்புக் கொண்ட Goldman Sachs Group Inc நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளரான Tim Leissner, மத்திய சிறையில் சரணடைவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபரின் மன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பதிவுகளின் படி, Leissner-இன் விண்ணப்பமானது, கடந்த ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் நவம்பர் 18 ஆகிய தேதிகளுக்கு இடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோல்ட்மேன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியத் தலைவராகப் பணியாற்றிய Leissner, 1எம்டிபி நிறுவனத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தவறாகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற குற்றச்சாட்டை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவர் அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒத்துழைத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு, நியூயார்க்கின் Brooklyn நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், கோல்ட்மேன் நிறுவனத்தில் பணியாற்றிய தனது சக ஊழியரான Roger Ng-க்கு எதிராக ஒரு முக்கிய சாட்சியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!