Jun 27, 2026
Thisaigal NewsYouTube
1எம்டிபி நிதி மோசடி: முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் அமெரிக்க அதிபர் மன்னிப்பிற்கு விண்ணப்பம்
உலகச் செய்திகள்

1எம்டிபி நிதி மோசடி: முன்னாள் கோல்ட்மேன் வங்கியாளர் அமெரிக்க அதிபர் மன்னிப்பிற்கு விண்ணப்பம்

Share:

வாஷிங்டன், ஜனவரி.23-

1எம்டிபி நிறுவனத்தில் நடந்த மாபெரும் நிதி மோசடியில் தனது பங்களிப்பை ஒப்புக் கொண்ட Goldman Sachs Group Inc நிறுவனத்தின் முன்னாள் வங்கியாளரான Tim Leissner, மத்திய சிறையில் சரணடைவதற்கு முன்னதாக அமெரிக்க அதிபரின் மன்னிப்புக்காக விண்ணப்பித்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்க நீதித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள பதிவுகளின் படி, Leissner-இன் விண்ணப்பமானது, கடந்த ஆண்டு செப்டம்பர் 3 மற்றும் நவம்பர் 18 ஆகிய தேதிகளுக்கு இடையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கோல்ட்மேன் நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியத் தலைவராகப் பணியாற்றிய Leissner, 1எம்டிபி நிறுவனத்திலிருந்து சுமார் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தவறாகப் பயன்படுத்தும் திட்டம் ஒன்றில் பங்கேற்ற குற்றச்சாட்டை, கடந்த 2018-ஆம் ஆண்டு ஒப்புக் கொண்டார்.

பின்னர் அவர் அமெரிக்க வழக்கறிஞர்களுடன் ஒத்துழைத்து, கடந்த 2022-ஆம் ஆண்டு, நியூயார்க்கின் Brooklyn நீதிமன்றத்தில் நடந்த வழக்கு ஒன்றில், கோல்ட்மேன் நிறுவனத்தில் பணியாற்றிய தனது சக ஊழியரான Roger Ng-க்கு எதிராக ஒரு முக்கிய சாட்சியாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

தாய்லாந்தில் சூட்கேஸிற்குள் இளம் பெண்ணின் உடல் கண்டெடுப்பு; ஆஸ்திரேலிய ஆடவர் பாங்காக் விமான நிலையத்தில் கைது

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

குழந்தை கடத்தல் சந்தேகம்: விண்டெட் செயலி மீது பிரான்ஸ் அரசு தீவிர விசாரணை

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

ஹார்முஸ் நீரிணையில் கப்பல் மீதான தாக்குதல்: மீட்புப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தியது ஐநா

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

டிரம்பின் பில்லியன் டாலர் 'அலிகேட்டர் அல்காட்ராஸ்' முகாம் ஓராண்டுக்குள் மூடப்பட்டது!

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

பிரான்சில் கடும் வெப்ப அலைக்கு இடையே நிறுத்தப்பட்டிருந்த காரில் சிக்கி மேலும் ஒரு சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!

வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கட்டிடங்கள் இடிந்து பெரும் சேதம்; பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அச்சம்!