Jun 18, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு இலங்கையின் நாடாளுமன்றம் வழங்கிய அங்கீகாரம்
உலகச் செய்திகள்

வெளிநாட்டு மருத்துவக்கல்லூரிகளுக்கு இலங்கையின் நாடாளுமன்றம் வழங்கிய அங்கீகாரம்

Share:

ஆகஸ்ட் 09-

ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளை அங்கீகரிக்கும் வகையிலான மருத்துவ சட்டத் திருத்த யோசனை இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த அங்கீகாரத்தின் கீழ், உலகளாவிய தரவரிசையில் உள்ள, வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்க உதவும் என்று இலங்கையின் சுகாதார அமைச்சர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்

இதன்படி உலக தரவரிசையில் முதல் 1000 மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரி

வெளிநாட்டு மருத்துவக் கல்லூரிகளில் இருந்து தகுதி பெற்ற சுமார் 300 இலங்கை மருத்துவர்கள் உள்ளனர். அவர்கள் தகுதி பெற்ற மருத்துவக் கல்லூரிகளை இலங்கை அங்கீகரிக்காததால் அவர்கள் இலங்கையில் பணியாற்ற முடியாத நிலை உள்ளது.

இந்த புதிய சட்டமூலத்தின் மூலம் அவர்கள் இலங்கையில் பணிபுரிய முடியும் என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சத்திரசிகிச்சை நிபுணர்கள், குழந்தை மருத்துவர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்களின் வெற்றிடங்களுக்கு தீர்வு காண இது வாய்ப்பை வழங்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை