Jun 17, 2026
Thisaigal NewsYouTube
பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா
உலகச் செய்திகள்

பாகிஸ்தான் அனுப்பிய 600 ட்ரோன்களை வீழ்த்திய இந்தியா

Share:

புதுடெல்லி, மே.17-

‘ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தான் ராணுவம் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்து உள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்களை மட்டும் குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவமோ, இந்திய ராணுவ நிலைகள் மற்றும் பொது மக்கள் வசிக்கும் பகுதிகளை நோக்கி ட்ரோன்களை அனுப்பித் தாக்க முயன்றது. ஆனால், இந்திய ராணுவத்தின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பாகிஸ்தானின் சதித் திட்டம் முறியடிக்கப்பட்டது.

இந்நிலையில், பாகிஸ்தான் அனுப்பிய 600க்கும் மேற்பட்ட ட்ரோன்களை இந்திய ராணுவம் அழித்துள்ளது தெரியவந்துள்ளது. ட்ரோன்கள் ஊடுருவத் துவங்கியதுமே, இந்திய பாதுகாப்புப் படையினர், வான் பாதுகாப்பு அமைப்பைச் செயல்படுத்தியதுடன், எல்லைக் கட்டுப்பாடு கோடு மற்றும் அனைத்துலக எல்லைப் பகுதியில் ஆயிரத்திற்கும் அதிகமான விமான எதிர்ப்புத் துப்பாக்கிகள் மூலம் பாகிஸ்தானின் ட்ரோன்கள் வீழ்த்தப்பட்டன.

இத்துடன் பாதுகாப்புக்குக் கூடுதல் சேர்க்கும் வகையில், குறுகிய தூரத்தில், தரையில் இருந்து வானில் உள்ள இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளும் பாகிஸ்தானுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டன. இத்துடன், ஆகாஷ் டிர் அமைப்பும் பாதுகாப்புப் பணியில் இருந்தது. இத்துடன் சுவீடனில் தயாரிக்கப்பட்ட எல் 20 வான் பாதுகாப்புத் துப்பாக்கிகள், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஜூயு -23 எம்எம் துப்பாக்கிகள், ஷில்கா துப்பாக்கி அமைப்பும் பாகிஸ்தான் டுரோன்களை வீழ்த்த பயன்படுத்தப்பட்டதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை