ஸ்கார்பரோ சோல் தீவுப் பகுதிக்கு அருகில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சொந்தமான மீன்வள மற்றும் கடற்கடை ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடற்கடையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எரிபொருள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற கப்பல்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆபத்தான நடவடிக்கையைச் சீனா மேற்கொண்டுள்ளதாகப் பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆசியான் மாநாடு நடைபெற்றுவரும் வேளையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.








