மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையில்லா கப்பல் போக்குவரத்தை உறுதி செய்ய வேண்டும் என ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் வலியுறுத்தவுள்ளனர்.
மணிலாவில் நடைபெற்ற ஆசியான் மாநாட்டின் வரைவு அறிக்கையின்படி, பிராந்திய பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரத்தில் சர்வதேச கடல் வழிகளின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையேயான போரினால் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி மற்றும் விலை உயர்வைச் சமாளிக்க அனைத்து நாடுகளும் சுயகட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அந்த மாநாட்டில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.








