Aug 13, 2026
Thisaigal NewsYouTube
இந்தியாவில் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தொடரும் போராட்டம்: வன்முறையில் 180 பேர் காயம்
உலகச் செய்திகள்

இந்தியாவில் கல்வி அமைச்சர் பதவி விலகக் கோரி தொடரும் போராட்டம்: வன்முறையில் 180 பேர் காயம்

Share:

இந்தியாவில் தேசிய தேர்வு முகமைத் தேர்வுகளில் ஏற்பட்ட முறைகேடுகளைக் கண்டித்தும், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும் 'கெரோச் ஜனதா கட்சி' அமைப்பின் தலைமையில் தொடர் போராட்டங்கள் வெடித்துள்ளன. தில்லி நாடாளுமன்றத்தை நோக்கிச் செல்ல முயன்ற ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்களைத் தடுத்த காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் கலைத்தனர்.

இந்த மோதல்களின் போது காவல்துறை அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் உட்பட 118 காவல்துறையினர் மற்றும் போராட்டக்காரர்கள் என மொத்தம் 178-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அமைதியான முறையில் போராட வந்த மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்டன், தில்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.

நாட்டின் வேலைவாய்ப்பின்மை மற்றும் தொடர்ச்சியான வினாத்தாள் கசிவுச் சர்ச்சைகளால் அதிருப்தியடைந்துள்ள இளைஞர்கள் சமூக வலைத்தளங்கள் மூலம் இந்த இயக்கத்திற்கு மிகப்பெரிய ஆதரவைத் தெரிவித்துள்ளனர். கல்வி அமைச்சர் பதவி விலகும் வரை போராட்டம் ஓயாது என எச்சரித்துள்ள இக்கூட்டமைப்பினர், நாட்டின் கல்வி மற்றும் தேர்வு முறைகளில் அவசரமான சீர்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.

Related News

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு