Oct 28, 2025
Thisaigal NewsYouTube
கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி எழுவர் பலி
உலகச் செய்திகள்

கோவாவில் கூட்ட நெரிசலில் சிக்கி எழுவர் பலி

Share:

பனாஜி, மே.03-

கோவாவில் கோவில் திருவிழாவொன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கோவா முதல்வர் பிரமோத் வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனைக்குச் சென்று காயம் அடைந்தவர்களை நேரில் சென்று சந்தித்தார். கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்தவர்களை அடையாளம் காணும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவில் விழாவில் மக்கள் அனைவரும் ஒன்று கூடி தரிசனம் செய்து கொண்டிருந்த போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில், சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related News

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

விமான நிலையத்தில் டிரம்ப் நடனம் ஆடியது சமூக வலைத்தளங்களில் வைரலானது

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

மலேசியா ஓர் அற்புதமான நாடு: டொனால்ட் டிரம்ப் பாராட்டு

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

47-வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு ஜப்பான் புறப்பட்டார் டொனால்ட் டிரம்ப்!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்: 1,711 மலேசியப் பொருட்களுக்கு வரிவிலக்கு - MITI அறிவிப்பு!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

"உலகளாவிய நிலைத்தன்மைக்குத் தூணாக இந்தியா-ஆசியான் கூட்டு": பிரதமர் மோடி பெருமிதம்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!

காஸா அமைதி முதல் கம்போடியா-தாய்லாந்து ஒப்பந்தம் வரை - உலக அமைதிக்கான டிரம்ப்பின் முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர் அன்வார்!