அமெரிக்கா வெளிநாட்டுப் பத்திரிகையாளர்களுக்கான விசா விதிமுறைகளைக் கடுமையாக்கியுள்ள நிலையில், இதற்குப் பதிலடியாகத் தானும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என்று சீனா எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த புதிய விதிமுறைகளின்படி, பெரும்பாலான வெளிநாட்டுப் பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில் 240 நாட்கள் மட்டுமே தங்க முடியும். ஆனால், சீனப் பத்திரிகையாளர்கள் வெறும் 90 நாட்கள் மட்டுமே தங்க அனுமதிக்கப்படுவார்கள்.
அமெரிக்காவின் இந்தச் செயலை "பாகுபாடு" என்று சாடியுள்ள சீனா, தங்களின் பத்திரிகையாளர்கள் மீதான இந்தக் கட்டுப்பாடுகளை உடனடியாக நீக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இல்லையெனில், தகுந்த பதிலடி நடவடிக்கைகளை எடுக்கத் தயங்கப்போவதில்லை என்று சீனா எச்சரித்துள்ளது. இந்த புதிய விசா கட்டுப்பாடுகள், டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தின் குடியேற்றக் கொள்கை மாற்றங்களின் ஒரு பகுதியாகக் கொண்டுவரப்பட்டுள்ளது. இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள ஊடக உரிமைகள் அமைப்புகள், இது ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று கருத்து தெரிவித்துள்ளன.








