கென்யாவின் அம்போசெலி தேசியப் பூங்கா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த ஒரு மாதத்தில் 15 யானைகள் திடீரென உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த யானைகளில் 10 யானைகள் இறப்பதற்கு முன்னர் பக்கவாதம் போன்ற அறிகுறிகளுடன் அவதிப்பட்டதாக கென்ய வனவிலங்கு சேவை தெரிவித்துள்ளது.
நைரோபி பல்கலைக்கழகம் நடத்திய முதற்கட்ட பரிசோதனைகளில், இறந்த யானைகளின் மாதிரிகளில் நச்சுப் பொருள் இருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியக்கூறுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து விரிவான சுற்றுச்சூழல் மற்றும் நீர் ஆதாரப் பரிசோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.








