செங்கடலில் சவுதி அரேபியாவின் எண்ணெய் டேங்கர் கப்பல்கள் மீது ஏமன் நாட்டைச் சேர்ந்த ஹூதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் தீவிரமடைந்து வரும் நிலையில், இந்தத் தாக்குதல் வளைகுடா பகுதியில் புதிய மோதல் முனையைத் திறந்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து ஈரானிய இலக்குகளைக் குறிவைத்து வான்வழித் தாக்குதல்களை நடத்தி வரும் சூழலில், ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணைகள் மற்றும் ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தி இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இதனால் பிராந்தியத்தில் பதற்றமான சூழ்நிலை மேலும் அதிகரித்து வருகிறது.








