Jun 18, 2026
Thisaigal NewsYouTube
மேட்டுப்பாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்: தீப்பற்றியதில் இளைஞர் பரிதாப பலி
உலகச் செய்திகள்

மேட்டுப்பாளையம் அருகே பள்ளத்தில் கவிழ்ந்த கார்: தீப்பற்றியதில் இளைஞர் பரிதாப பலி

Share:

மேட்டுப்பாளையம்- அன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கார் பள்ளதில் கவிழ்ந்து விபத்து

செப்டம்பர் 10-

மேட்டுப்பாளையம் - அன்னூர் சாலையில் நேற்று நள்ளிரவில் கார் ஒன்று சென்றுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர தடுப்பின் மீது பயங்கரமாக மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. உடனே காரில் தீப்பற்றியுள்ளது. தொடர்ந்து காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவெனபற்றி எரிந்து கார் முழுவதுமாக தீக்கிரையானது.

கார் பள்ளத்தில் கவிழ்ந்த வேகத்தில் லாக் ஆகி கொண்டதால் ஓட்டி வந்த இளைஞர் காருக்குள்ளேயே சிக்கிக் கொண்டார். இச்சம்பவத்தை கண்ட அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து உடனடியாக மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக தீக்கிரையானது. மேலும், காரை ஓட்டி வந்த இளைஞர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இச்சம்பவம் குறித்து காரமடை காவல் ஆய்வாளர் ஞானசேகரன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து தீப்பற்றி எரிந்த காரின் எண்ணை வைத்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எதற்காக இச்சாலையில் பயணித்தார்? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்த இளைஞர் சிறுமுகை லிங்காபுரம் கோவிந்தனூர் பகுதியைச்சேர்ந்த சிவராஜ் என்பவரது மகன் நவீன்(27) என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை