காபூல், ஜனவரி.26-
ஆப்கானிஸ்தானில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. அதே சமயம் கடும் பனிப்பொழிவும் ஏற்பட்டுள்ளது. அவற்றில் சிக்கி இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் சுமார் 458 வீடுகள் முழுமையாகவும், பகுதியளவிலும் இடிந்து சேதமடைந்துள்ளன.








