ஈரான் மீதான பெரிய அளவிலான தாக்குதல்கள் குறித்து அமெரிக்கா இன்னும் இறுதி முடிவெடுக்கவில்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
வாஷிங்டனுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் தரப்பு தீவிர ஆர்வம் காட்டி வருவதால், தற்காலிகமாகப் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை ஒத்திவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அணு ஆயுதம் தயாரிக்கும் முயற்சியில் ஈரான் ஈடுபடுவதைத் தடுப்பதே தனது முக்கிய இலக்கு என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
மறுபுறம், ஏமனில் உள்ள ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது சவுதி அரேபியா வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியுள்ளதால், மத்திய கிழக்கில் பதற்றம் மேலும் அதிகரித்து வருகிறது.








