மாட்ரிட் பிராந்தியம் மற்றும் அவிலா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், அங்கு தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தலைநகருக்கு அருகில் பல காட்டுத்தீ சம்பவங்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதால், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் வளங்களை விரைவாக ஒதுக்கீடு செய்யவும் உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இராணுவ அவசரப் பிரிவு மற்றும் அனைத்து சாத்தியமான வளங்களும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.








