ஸ்பெயின் நாட்டின் உலகக் கோப்பை வெற்றிக் கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட விபத்தில் 13 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்பெயினின் வெற்றியைத் தொடர்ந்து, மேற்குப் பகுதியில் உள்ள சலாமங்கா மாகாணத்தில் அமைந்துள்ள சியுடாட் ரோட்ரிகோ நகரில் உள்ள அர்போல் கோர்டோ நீரூற்றுப் பகுதிக்கு ஏராளமான மக்கள் திரண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நள்ளிரவைக் கடந்த வேளையில் எதிர்பாராதவிதமாக அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நீரூற்றின் மேல்பகுதி திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 13 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மகிழ்ச்சியுடன் தொடங்கவிருந்த கொண்டாட்டம் திடீர் சோகத்தில் முடிந்ததால், அந்தப் பகுதி மக்களும் உள்ளூர் நிர்வாகத்தினரும் தங்களது ஆழ்ந்த இரங்கலையும் வருத்தத்தையும் தெரிவித்துள்ளனர்.








