Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 5 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை
உலகச் செய்திகள்

ஹைதராபாத் குண்டு வெடிப்பு: 5 பயங்கரவாதிகளுக்கு தூக்கு தண்டனை

Share:

ஹைதராபாத், ஏப்ரல்.09-

ஹைதராபாதில், கடந்த 2013-ல் நிகழ்ந்த இரட்டை குண்டு வெடிப்புத் தாக்குதல் குற்றவாளிகள் ஐந்து பேருக்கு தூக்கு தண்டனையை உறுதிச் செய்து, தெலுங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாதில், 2013, பிப். 21-ல் இரட்டை குண்டு வெடிப்பு தாக்குதல் நிகழ்ந்தது. பஸ் நிலையம் மற்றும் அருகில் இருந்த கடை ஆகியவற்றில் அடுத்தடுத்து நடத்தப்பட்ட இந்த பயங்கரவாதத் தாக்குதலில், 18 பேர் கொல்லப்பட்டனர்; 131 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு இந்தியன் முஜாகிதீன் என்ற பயங்கரவாத அமைப்பினர் முக்கியக் காரணமாக இருந்தனர். இது தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இந்தியன் முஜாகிதீன் இணை நிறுவனர் ஒருவர் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், ஐந்து பேருக்கும் மரண தண்டனை விதித்து 2016-ல் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து, தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில், குற்றவாளிகள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. எனினும் அந்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. எனவே பயங்கரவாதிகள் ஐந்து பேரின் மரண தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை