உலகக் கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி ஆட்டத்தில் மொராக்கோ அணிக்கு எதிரான பிரான்சின் வெற்றியைத் தொடர்ந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 17 வயது சிறுமி ஒருவர் லாரியிலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். இந்தச் சோகச் சம்பவம் பிரான்சின் வடக்குப் பகுதியில் உள்ள ஆல்னோய்-அய்மெரீஸ் நகரில் நிகழ்ந்துள்ளது. பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியதை அடுத்து நாடு முழுவதும் கொண்டாட்டங்கள் வெடித்தன. அப்போது லாரியின் பின்புறத்தில் நின்றுகொண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்தச் சிறுமி திடீரென கீழே விழுந்ததில், அதே லாரியின் சக்கரம் அவர் மீது ஏறியதாக அவசரச் சேவைப் பிரிவினர் தெரிவித்தனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், லாரியை ஓட்டி வந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். பிரான்சின் பாரிஸ் உள்ளிட்ட பல நகரங்களில் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த போதிலும் இந்த எதிர்பாராத விபத்து நிகழ்ந்துள்ளது.

உலகச் செய்திகள்
உலகக் கோப்பை கொண்டாட்டத்தின் போது லாரியிலிருந்து விழுந்து 17 வயது சிறுமி பரிதாப உயிரிழப்பு
Related News

மலேசியா–இந்தியா வர்த்தகத் தள ஒருங்கிணைப்பு பொறுப்பு அமைச்சர் ரமணனுக்கு: அன்வார்–மோடி முடிவு

“என் சகோதரர்” பிரிக்ஸ் மாநாட்டில் அன்வார் - மோடி நெகிழ்ச்சியான சந்திப்பு

மலேசியா–ரஷ்யா இடையே நேரடி விமானம், விசா இல்லா பயணம் - விளாடிமிர் புதினுடன் அன்வார் இருதரப்புப் பேச்சுவார்த்தை

பிரிக்ஸ் உச்சநிலை மாநாடு: மோடி, விளாடிமிர் புடின் உள்ளிட்ட முக்கியத் தலைவர்களுடன் அன்வார் பேச்சுவார்த்தை

மெக்சிகோவில் பட்டாசு வெடிவிபத்து: 10 பேர் பலி; 60 பேர் காயம்


