ஈராக் பகுதியில் செயல்பட்டு வரும் ஈரான் ஆதரவு தீவிரவாத அமைப்புகளைக் குறிவைத்து, அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியாவின் போர் விமானங்கள் கூட்டு வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளன.
கடந்த சில நாட்களாக அமெரிக்கப் படைகள் மற்றும் சவுதி நாட்டின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தொடர்ச்சியாக நடத்தப்பட்ட இருபதுக்கும் மேற்பட்ட ஆளில்லா விமானத் ட்ரோன் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஈரான் மற்றும் அதன் ஆதரவுப் படைகள் மேற்கொண்டுவரும் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தத் தவறினால் கடுமையான ராணுவ நடவடிக்கைகள் தொடரும் என அமெரிக்க மத்திய கட்டளைகம் எச்சரித்துள்ளது.








