பிரான்சில் பல ஆண்டுகளாகத் தேடப்பட்டு வந்த டெல்ஃபை ஜூபிலார் காணாமல் போன வழக்கில், அவரது கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து அவரது உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
பிரான்ஸ் நாட்டில் டெல்ஃபை ஜூபிலார் என்ற பெண் கடந்த 2020 ஆம் ஆண்டு காணாமல் போனார். இவ்வழக்கில் அவரது கணவர் செட்ரிக் ஜூபிலாருக்கு கடந்த அக்டோபர் மாதம் 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவர் தனது மனைவியைக் கொலை செய்ததாகக் கூறி தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேல்முறையீட்டு வழக்கு விசாரணைக்கு முன்பாக அவர் அளித்த ஒப்புதலின் அடிப்படையில், தெற்கு பிரான்சில் நடத்தப்பட்ட தேடுதலில் மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டு டிஎன்ஏ பரிசோதனை மூலம் அவை டெல்ஃபை ஜூபிலாருடையதுதான் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.








