Jun 11, 2026
Thisaigal NewsYouTube
குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!
உலகச் செய்திகள்

குடியேற்றவாசிகளுக்கு எதிரான வன்முறை "இனவாதக் குண்டர்தனம்" – பிரிட்டன் அமைச்சர் ஹிலாரி பென் கடும் கண்டனம்!

Share:

வடக்கு அயர்லாந்தில் குடியேற்றவாசிகளுக்கு எதிராக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்கள், நிறத்தின் அடிப்படையில் மக்களை இலக்கு வைக்கும் "இனவாதக் குண்டர்தனம்" என்று பிரிட்டனின் வடக்கு அயர்லாந்து விவகாரங்களுக்கான அமைச்சர் ஹிலாரி பென் மிகக் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.

கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றைத் தொடர்ந்து மூண்ட இந்த வன்முறைகளில், முகமூடி அணிந்த கும்பல் வெளிநாட்டவர்களின் வீடுகளைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தியதுடன் வாகனங்களுக்கும் தீவைத்துள்ளது. இந்த அசம்பாவிதங்களின்போது, காரில் செல்பவர்களை வழிமறித்து அவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று நிறத்தின் அடிப்படையில் விசாரித்துத் தாக்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் சிறுபான்மை இன மக்கள் பெரும் அச்சத்தில் வாழ்ந்து வரும் நிலையில், வன்முறையைக் கட்டுப்படுத்த முற்பட்டபோது 12 போலீஸ் அதிகாரிகள் காயமடைந்துள்ளதுடன், 16 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சமூக ஊடகங்கள் வழி பரப்பப்படும் வதந்திகள் மற்றும் எலோன் மஸ்க் போன்ற பிரபலங்களின் பதிவுகள் இந்த வன்முறையை மேலும் தூண்டியுள்ளதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுகுறித்து கருத்துரைத்த அமைச்சர் ஹிலாரி பென், நாட்டின் சட்டமும் காவல்துறையும் தங்களின் கடமையைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் என்றும், இத்தகைய சட்டவிரோதக் குண்டர்தனங்களுக்கு எவ்வித நியாயமும் கற்பிக்க முடியாது என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Related News

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

மலேசியர்களின் மனதைக் கவர்ந்த இந்திய யூடியூபர்களின் பாரம்பரிய 'நாசி லெமாக்' சமையல் வீடியோ!

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

ஏர் இந்தியா 787 விமான விபத்து நடந்து 1 ஆண்டு, இன்னும் முடியாத விசாரணை! இந்திய அதிகாரிகள் மீது பைலட் சங்கங்கள் கடும் அதிருப்தி

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

போர்நிறுத்தம் முறிந்தது, அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் நடத்திய அதிரடி ஏவுகணைத் தாக்குதல்

அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு... உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என உறுதி

அமெரிக்க அபாச்சி ஹெலிகாப்டரை ஈரான் சுட்டு வீழ்த்தியதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு... உடனடியாக பதிலடி கொடுக்கப்படும் என உறுதி

குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ராட்சத கரடி! அதிரடியாக மூடப்பட்ட 94 பள்ளிகள்

குடியிருப்புப் பகுதியில் நுழைந்த ராட்சத கரடி! அதிரடியாக மூடப்பட்ட 94 பள்ளிகள்

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் பலி, மிண்டானாவோவில் பேரழிவு!

பிலிப்பைன்ஸில் 7.8 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 32 பேர் பலி, மிண்டானாவோவில் பேரழிவு!