நேட்டோ அமைப்பில் பயிற்சிப் பணியாளராகப் பணிபுரிந்து வந்த சீன வம்சாவளியைச் சேர்ந்த கனடா குடிமகன் ஒருவர், உளவு பார்த்த குற்றச்சாட்டின் பேரில் பெல்ஜியம் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்நாட்டு நாட்டின் பெடரல் வழக்கறிஞர் அலுவலகம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது.
மான்ஸ் நகரில் உள்ள நேட்டோவின் ஐரோப்பிய நட்பு நாடுகளின் தலைமைப் பீடமான சேப் பயிற்சி பெற்று வந்த இவர், வெளிநாட்டிற்காக உளவு பார்த்தல் மற்றும் குற்றவியல் அமைப்பில் உறுப்பினராக இருத்தல் ஆகிய சந்தேகங்களின் அடிப்படையில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். நேட்டோ அமைப்பின் பாதுகாப்புப் பிரிவினருக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் இந்த விவகாரம் உளவுத்துறைக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பெல்ஜியம் காவல்துறையினர் இவரது வீடு மற்றும் பணிபுரியும் இடங்களில் அதிரடிச் சோதனைகளை நடத்தியுள்ளனர். தொடர்ந்து நடந்த விசாரணைகளுக்குப் பிறகு, சம்பந்தப்பட்ட நீதிபதி வியாழக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்துள்ளார். இந்தச் சம்பவம் பாதுகாப்பு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.








