மியான்மர் விவகாரம் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள பதற்றங்களுக்கு மத்தியில், ஆசியான் வெளியுறவு அமைச்சர்களின் மாநாடு பிலிப்பீன்ஸ் தலைநகர் மணிலாவில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டுள்ளனர்.
மியான்மரை ஆசியான் அமைப்பில் மீண்டும் முழுமையாக இணைப்பது குறித்து உறுப்பு நாடுகளிடையே கடும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. மியான்மரை மீண்டும் அரவணைக்க வேண்டும் என்று தாய்லாந்து உள்ளிட்ட சில நாடுகள் வாதிடும் அதேவேளையில், அங்கு அடக்குமுறைகள் தொடர்வதால் உயர் மட்ட பேச்சுவார்த்தைகளுக்கு மலேசியா உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
மேலும், அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரினால் ஏற்பட்டுள்ள பொருளாதாரச் சுமை மற்றும் பிராந்திய எரிசக்தி பாதுகாப்பு குறித்தும் இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க்கோ ரூபியோ மற்றும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ள நிலையில், தென்சீன கடல் விவகாரங்களும் முக்கிய விவாதப் பொருளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.








