Jun 17, 2026
Thisaigal NewsYouTube
நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
உலகச் செய்திகள்

நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Share:

வெலிங்டன், மார்ச்.25

நியூசிலாந்தில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உலுக்கியது. அந்நிலநடுக்கம் ரிக்டர் அளவையில் 7.0 ஆகப் பதிவாகியிருந்தது.

நியூசிலாந்தின் மேற்கு பகுதியில் அந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மையமிட்டிருந்தது. நிலநடுக்கத்தின் அதிர்வு காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வெளியே ஓடியதாகத் தகவல் கூறுகிறது.

அந்நிலநடுக்கத்தால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும் எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை.

நியூசிலாந்திலேயே பதிவான மிக வலுவான நிலநடுக்கம் 1931ம் ஆண்டு ஹாக்ஸ் பகுதியில் ஏற்பட்டது தான். அது ரிக்டர் அளவையில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. அதில் 256 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை