Oct 17, 2025
Thisaigal NewsYouTube
இலங்கையின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன் கிடைத்தது
உலகச் செய்திகள்

இலங்கையின் முன்னாள் அதிபருக்கு ஜாமீன் கிடைத்தது

Share:

கொழும்பு, ஆகஸ்ட்.27-

இலங்கையின் முன்னாள் அதிபரும், 6 முறை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்கே, தன் பதவி காலத்தில் அரசு நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து அவர் அண்மையில் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரின் உடல்நிலையைக் காரணம் காட்டி, அவருக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதையடுத்து அவருக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம், இவ்வழக்கு விசாரணை வரும் அக்டோபர் மாத இறுதியில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவித்தது.

Related News